Monday 1 April 2019

பிரியத்துக்குரியவர்களிடம்
இன்னும் முழுமையாக வெளிக்காட்டாத உணர்வுகள்
இன்னும் உச்சரிக்கப்படாமல் மனதில் பாதுகாத்திருக்கும் சொற்கள்
இன்னும் அளிக்காத வாக்குகள்
இன்னும் சிந்தாத கண்ணீர்
இன்னும் இன்னும் வளர்ந்து கொண்டேயிருக்கும் நம்பிக்கை
இன்னும் இன்னதென்று வடிவப்படுத்த முடியாத அன்பு

ஓயாப் பெருங்கடலுக்கும்
அந்திச் சூரியனுக்கும்
இடையே
வித விதமான
மேகங்கள்
மிதக்கின்றன