Monday 8 April 2019

சூடிக் கொடுத்த மாலை

மண்ணில் மலர்கள்
தவமிருந்தன
சூடிக் கொடுத்த மாலையின்
மணம் பெறுவதற்கு
மீன் கண்ணியின்
கிளி
செல்லும் வழியில்
கூறிச் சென்றது
ஆகமும் அகமும்
அன்பாய் ஆனவள்
மணம் அது
இறைவன்
அதை அவளிடம்
யாசித்துப் பெற்றான்
அவளை நினைத்துக் கொள்ளுங்கள்

அன்னையின் தலையில் பூத்திருக்கும் பூக்கள்
மணப்பது எவ்விதம் என்பது
புதிராகவே இருந்தது
கைக்குழந்தைக்கு