Friday 26 April 2019

வருத்தம்

சாதாரணங்களின் தளத்தில்
மலர்ந்திருக்கும் மலராகவே
நீ
எப்போதும் உணரப்பட்டாய்
*
இந்த உலகின்
அளவற்ற கண்ணீரின்
மறுபக்கமாகவே
மலர்களைப்
புவியிறக்கின
தெய்வங்கள்
*
மலரின் புன்னகை
மலரின் சொற்கள்
மலரின் மௌனம்
மலரின் பிரியங்கள்
*
ஒரு மலரை
எப்படி கையாண்டாலும்
உருவாகிறது
பிழையின் பதட்டம்
*
மலர்கள்
துயருறும் போது
வருந்துகின்றன
தெய்வங்கள்