உனது இருப்பை
ஒரு மலராக்கினேன்
புவியெங்கும்
அன்றலர்ந்த மலர்களின்
நறுமணமாய்
நீ ஆனாய்
உனது இருப்பை
ஒரு நிலவாக்கினேன்
கிரணங்களின் எடையில்
நெகிழும் தென்றலாய்
நீ மிதந்தாய்
உனது இருப்பை
ஒரு விதையாக்கினேன்
நா உணரும்
எல்லா சுவையாகவும்
நீ ருசித்தாய்
ஒரு மலராக்கினேன்
புவியெங்கும்
அன்றலர்ந்த மலர்களின்
நறுமணமாய்
நீ ஆனாய்
உனது இருப்பை
ஒரு நிலவாக்கினேன்
கிரணங்களின் எடையில்
நெகிழும் தென்றலாய்
நீ மிதந்தாய்
உனது இருப்பை
ஒரு விதையாக்கினேன்
நா உணரும்
எல்லா சுவையாகவும்
நீ ருசித்தாய்