Tuesday 23 April 2019

பரிணாமம்

உனது இருப்பை
ஒரு மலராக்கினேன்
புவியெங்கும்
அன்றலர்ந்த மலர்களின்
நறுமணமாய்
நீ ஆனாய்

உனது இருப்பை
ஒரு நிலவாக்கினேன்
கிரணங்களின் எடையில்
நெகிழும் தென்றலாய்
நீ மிதந்தாய்

உனது இருப்பை
ஒரு விதையாக்கினேன்
நா உணரும்
எல்லா சுவையாகவும்
நீ ருசித்தாய்