Monday 20 May 2019

யாத்திரை

அவியிடுகிறோம்
நாள் என்னும் தீயில்
எங்கள் துயரங்களை
எங்கள் கண்ணீரை
இன்னும் சொல்லாக்காமல் இருக்கும்
எங்கள் உணர்வுகளை

எங்கள் உடல்கள் இன்னும் உழைக்கட்டும்
எங்கள் மனங்கள் இன்னும் விரியட்டும்
எங்கள் உணர்வுகள் வானளவு உயரட்டும்

கணமும் ஓயாமல்
இமைப்பொழுதும் சோராமல்
மெய்வருத்தம் பாராமல்
ஒவ்வொரு
சிற்றடிகளாய்
உறுதியாய்
முன்னேறும்
எம் பயணம் தொடரட்டும்
எம் பயணம் தொடரட்டும்