Wednesday 1 May 2019

நீர்மை

பள்ளி விட்டதும்
ஹோ என ஒலி எழுப்பி
திறந்திருக்கும் பெரிய gateன் வழியே
வெளியே பாயும்
குழந்தைகள் கூட்டம் போல்
இன்று இரவு 9.16க்கு
வந்தது
மழை
தார்ச்சாலையில் படும் சத்தம்
மண்பரப்பில் கொட்டும் சத்தம்
கார் பார்க்கிங் ஷீட் மேல் கேட்கும்
டமார சத்தம்
என
ஜூகல் பந்தி கச்சேரி
கரண்ட் கட் ஆனது
வீட்டுக் கூடத்தின் காற்றில்
நிரம்பியது நீர் ஈரம்
சிறு மழை கூட
இந்த வாழ்க்கை மேல்
சட்டென
கூடுதல் நம்பிக்கையை
அளித்து விடுகிறது