Tuesday 4 June 2019

இணைதல்

அன்று
அந்த பிரதேசத்தை
காகங்கள்
வட்டமிட்டன
சில காகங்கள்
வீடுகளின் சுற்றுச்சுவர் மேல்
மரக்கிளைகள் மேல்
வீதியில் நின்றிருந்த வாகனங்கள் மேல்
அமர்ந்திருந்து கரைந்து கொண்டிருந்தன
இப்பவும்
தினமும் ஏதாவது ஒரு வீட்டில்
உருண்டை உணவு வைத்து
பித்ரு கடன் தீர்க்கின்றனர்
கூடி வந்த பித்ருக்கள்
கூறும் செய்தி என்ன
என்று
குழம்பி நின்றனர்
மக்கள்
குழந்தைகள்
பல் முளைக்கா வாயுடன்
வாய் நிறைய சிரிப்புடன்
கா கா கா
என்றன