உன்னிடம் வந்து
விட எண்ணுகிறேன்
அந்த அமைதிக்கு
அந்த மௌனத்துக்கு
அந்த மெல்லிய வெளிச்சத்துக்கு
என்னிடம் சொற்கள்
ஏதும் இல்லை
கரையும் அகம் மட்டுமே
கண்ணீர்
உன்னைச் சூழ்ந்திருக்கும்
பிராந்தியத்தில்
சஞ்சீவி மணம்
அன்பு
உருமாற்றிக் கொண்டேயிருக்கிறது
ஒன்றை
மற்றொன்றாக