நாம் உரையாடிக்
கொள்வதில்லை
நாம் விவாதிப்பதில்லை
நாம் பூசலிட்டு
சண்டையிடுவதில்லை
அமைதியில் உறைகின்றன
நமது பிராந்தியங்கள்
நமது பாதைகள்
வானில் பறக்கின்றன
அன்பின் நிலத்தின்
பறவைகள்
வான் நோக்கி பூக்கின்றன
அன்பின் நிலத்தின்
மலர்கள்