இன்று இரவு சென்னை புறப்படுகிறேன். வெள்ளிக்கிழமையன்று பத்து நூல்கள் வெளியீட்டு விழாவில் ‘’அகதி’’ சிறுகதைத் தொகுப்பு குறித்து பேசுகிறேன்.
மறுநாள் சனிக்கிழமை காலை நவஜீவன் எக்ஸ்பிரஸ்ஸில் அகமதாபாத் செல்கிறேன். ஞாயிறு காலை அகமதாபாத் சென்றடைகிறேன். ஞாயிறும் திங்களும் சர்வதேச காற்றாடித் திருவிழாக் கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறேன்.
செவ்வாயன்று இரண்டு நாட்கள் பயணம் முடிந்து சென்னை திரும்புகிறேன். உடன் அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை.
நண்பர்கள் அழைக்கிறார்கள். ஊர் திரும்பியதும் ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஒருநாள் செல்ல வேண்டும்.
நண்பர்கள் அழைக்கிறார்கள். ஊர் திரும்பியதும் ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஒருநாள் செல்ல வேண்டும்.
படகு நீரில் மிதப்பது போல பயணங்களில் மிதக்கிறேன்.