அன்புள்ள பிரபு,
நன்றி
நாரா.சிதம்பரம்
இப்போதுதான் ஒரு வாரமாக உங்கள் வலைப்பூவைப் படித்து வருகின்றேன். மறையூர்ச்சாலைக்குச் செல்ல வேண்டும் போலுள்ளது. உங்களின் வட இந்தியப் பயணம் ஒரு சாகசக் கலை. அங்கங்கே உள்ள மனிதர்களுடன் மிக இயல்பாக ஒட்டிக்கொள்கிறீர்கள். இந்தியா எங்கணுமே உள்ள மனிதர்கள் இவ்வாறு பயணிகளுக்கு உதவுவது மகிழ்வாகவும் பெருமையாகவும் உள்ளது. திரும்பி வரும் போது ஏற்பட்ட அனுபவங்களையும் எழுதியிருக்கலாம். கம்பராமாயணக் கட்டுரைகளும் மிக ந்ன்றாக உள்ளன. சோமேசுவரனுடன் சென்ற நடை அழகு. நான் இன்னும் சோமேசுவரன் அளவுக்குக் கூட கவிதைகள் படிக்கத் தொடங்கவில்லை.
நன்றி
நாரா.சிதம்பரம்