Thursday 23 April 2020

மாலை உரையாடல்கள் - ஒரு வாசகர் கடிதம்

அன்புள்ள பிரபு,

தங்களுடைய மாலை உரையாடல்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. பத்தாம் நாள் மாலை உங்கள் ந‌ண்பர் கூறுவது போலவே நானும் நெடுநாட்கள் இருந்தேன். நம்மில் பலர் இன்னும் அவ்வாறே உள்ளனர். திட்டமிட்டு நிறைய நம் பண்பாட்டுக்கூறுகள் நம்மிடம் இருந்து விலக்கப்பட்டன. நம்மில் பலருக்கும் அவற்றைத் தேடி அறிய ஆர்வமில்லை. இவ்வாறு நிறைய இழந்துவிட்டோம். இந்தப் பத்து நாள் உரையாடல்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். நாம் இழந்த பண்பாடுகளை மீண்டும் பற்றிக் கொள்ளவும், சேர்த்துக் கொண்ட ஊழல் முதலியவற்றை விட்டு விடவும் இந்த உரையாடல்கள் நிச்சயமாக ஒரு தூண்டுகோலாக அமையும் என்பது என் எண்ணம் மற்றும் விருப்பம். நன்றி பிரபு!

நாரா.சிதம்பரம்.