எத்தனையோ மனித முகங்களில்
உணர்வின் விழிநீர்த் துளிகளில்
வாசலில் குழுமும் பட்சிகளில்
பிராணிகள் காட்டும் நேசத்தில்
ஆறுதல் பெற்று அமைதியுறும் அகத்தில்
ஓயாத கடலலைகளில்
காற்றுடன் அசையும் நீண்ட மரங்களில்
மெல்ல மிக மெல்ல
வருகை தரும் காலைகளில்
உதயத்தின் சிவப்பு சூரியனில்
அந்தியில் எழும் இளநிலவில்
தினம் தினம்
நிகழ்கிறது
நின்
விஸ்வரூபம்
உணர்வின் விழிநீர்த் துளிகளில்
வாசலில் குழுமும் பட்சிகளில்
பிராணிகள் காட்டும் நேசத்தில்
ஆறுதல் பெற்று அமைதியுறும் அகத்தில்
ஓயாத கடலலைகளில்
காற்றுடன் அசையும் நீண்ட மரங்களில்
மெல்ல மிக மெல்ல
வருகை தரும் காலைகளில்
உதயத்தின் சிவப்பு சூரியனில்
அந்தியில் எழும் இளநிலவில்
தினம் தினம்
நிகழ்கிறது
நின்
விஸ்வரூபம்