Wednesday 20 May 2020

நீயே உலகம்

எத்தனையோ மனித முகங்களில்
உணர்வின் விழிநீர்த் துளிகளில்
வாசலில் குழுமும் பட்சிகளில்
பிராணிகள் காட்டும் நேசத்தில்
ஆறுதல் பெற்று அமைதியுறும் அகத்தில்
ஓயாத கடலலைகளில்
காற்றுடன் அசையும் நீண்ட மரங்களில்
மெல்ல மிக மெல்ல
வருகை தரும் காலைகளில்
உதயத்தின் சிவப்பு சூரியனில்
அந்தியில் எழும் இளநிலவில்

தினம் தினம்

நிகழ்கிறது

நின்
விஸ்வரூபம்