Thursday 21 May 2020

எங்கே இருக்கிறாய்
மலர்ச்சிரிப்பின் மலர்களை புவியெங்கும் காண்கிறேன்
மௌனத்தின் மேகங்கள்
பொழிகின்றன
நிலமெங்கும்
கடலலைகளில் நுரைக்கும் உற்சாகம்
காற்றின் ஈரம்
தெள்ளிய வானம்
அகத்தைத் தேடுபவன்
மரத்தடியில்
விழி மூடி அமர்ந்திருக்கிறான்