Monday 13 July 2020

ஆடிப்பூரம்


மரக்கன்றுகளை வழங்குவதற்கு ஆடிப்பூரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். தமிழ்க்கவியான ஆண்டாளின் பிறந்த நாள் ஆடிப்பூரம். இந்த வருட ஆடிப்பூரம் ஆடிவெள்ளியன்றும் வருகிறது. திருப்பாவை இனிமையான முப்பது பாடல்களில் இந்திய நிலப்பரப்பை - ஆன்மநேயத்தை முன்வைக்கிறது. எல்லா தமிழ்க் குடும்பங்களிலும் ஏதோ ஒரு விதத்தில் திருப்பாவைப் பாடல்கள் சென்றடைந்துள்ளன. குழந்தைகள் தவழும் ஒவ்வொரு ஊரும் கோகுலமே என்ற உணர்வை திருப்பாவை இசைக்கும் போது அடைகிறோம். உலகம் ஒரு குடும்பம் என்கிறது இந்திய மரபு.