Thursday 27 August 2020

 தாரைகளுக்கு
இடைப்பட்ட காற்றின் பரப்பு
தாழ்வாரத்தில் நிற்கும்
முகங்கள் மீது
சாரல் தெளித்திடும்
இந்த மழையில்
சில நாட்கள் முன் நட்ட
செடிகள் 
வளரத் துவங்குகின்றன
மலர்கள் நோக்கி
அந்திப் பொழுதில்
சாலையோரத்தில்
நீர்ப்பயணம் செல்கின்றன
அன்று அலர்ந்த மலர்கள்