உன் இயல்பால்
உன் மென்மையால்
உன் இசையால்
என்னை அழித்து விடு அன்பே
பனி படர்ந்த பர்வதங்களில்
ஓடி ஓடி நீரோடை
மென்மையாக்கியிருக்கும்
கூழாங்கற்களில்
அடர்ந்திருக்கும் இரவிலிருந்து
முளைத்திருக்கும்
பச்சைப் பசும் புல்லில்
பறவையின் சின்னஞ்சிறு சிறகொன்றில்
உயிர் பெற்று
மீள்கிறேன்