Saturday 26 December 2020

தந்தை

உங்கள் உள்ளம்கைகள் காய்த்து கடினமாய் இருந்தன
உங்கள் பாதங்கள் புழுதி படிந்திருந்தன
உங்கள் அணுகுமுறை 
உங்கள் சொற்கள்
கடினமாக
சமயத்தில்
மிகக் கடினமாக
இருந்தன
உங்கள் கண்களின் அன்பின் ஊற்றுக்களை
அடைத்தே வைத்திருந்தீர்கள்
என்றோ
எப்போதோ
ஒருமுறை
நாங்கள் உணர்ந்தோம்
வெளிப்படுத்தாத
சொல்லாக்காத
அன்பு
பேரன்பாய் உருமாறும் என்பதை
அப்போது
கண்ணீர் சிந்தினோம்
உங்களை நினைத்து