Tuesday 1 March 2022

பிள்ளைக் கனியமுது

 

வாழ்வின் கணங்கள்
பிரவாகிக்கும் நதி
ஆத்மதாகம் கொண்டுள்ளன
அனாதி ஜீவன்கள்
நீ இன்னும்
மொழியால்
பேசத் துவங்கவில்லை
நீ இன்னும்
நடக்கத் துவங்கவில்லை
உனது மென்மையான
உள்ளங்கைகளை
நெற்றி மேல் வைக்கிறாய்
அப்போது
உதிக்கின்றன
நிலவுகள்
வானிலும்
அகத்திலும்