Friday 25 March 2022

வான் புவி

 இன்று காலை
ஒரு குழந்தையைச் சந்தித்தேன்
சொற்களால் சில நிமிடங்கள் உரையாடினோம்
அக்குழந்தையின் முகத்தின் ஒளிர்வைக் கண்ட போது
ஒவ்வொரு பாராட்டுக்கும் 
முகத்தில் பரவும் மகிழ்ச்சி ரேகைகளைக் கண்ட போது
இனிமையான
சங்கீதமென ஒலித்த 
அக்குழந்தையின் மொழி உச்சரிப்புகளைக் கேட்ட போது
இந்த உலகம் மலர்களால் ஆனது என்றும்
இந்த உலகம் ஒரு மலர் என்றும்
தோன்றியது
அகம் கரையும் அனுபவங்களில்
மலரும் மலர்
உருவம் கொண்டதா
அருவம் ஆனதா