Wednesday 9 March 2022

நானாவித அலுவல்கள்

பலவிதமான பணிகள் நிறைந்துள்ளன. 

’’காவிரி போற்றுதும்’’ பணிகள் தொடர்பாக நண்பர்கள் சிலரைச் சந்திக்க வெளியூர் செல்ல வேண்டியுள்ளது. 

இரண்டு கிராமங்களில் கணக்கெடுப்புப் பணியைத் துவக்க வேண்டும். உத்யோகம் தொடர்பான வேலைகள் பகல் நேரத்தில் இருப்பதால் கிராமங்களில் கணக்கெடுப்பை காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மேற்கொள்ள வேண்டும். பணி முடிந்து 9.30 மணி அளவில் வீடு திரும்பி உத்யோக விஷயங்களை வழக்கம் போல் மேற்கொள்ளலாம். 

கணக்கெடுப்பை முழு நேரமாக மேற்கொண்டால் - ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற கணக்கில் - முழு கிராமத்தையும் நிறைவு செய்ய பத்து நாட்கள் ஆகும். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் என மேற்கொண்டால் முப்பது நாட்கள் ஆகும். மெதுவாக முன்னேறிச் சென்றாலும் முன்னே சென்று கொண்டிருப்பது நலம் பயக்கும் ஒன்றே. 

நேற்று ஒரு சிறுகதை எழுதினேன். 

பலவிதமான பணிகளில் ஈடுபடுவது அகத்தில் உற்சாகத்தை நிரப்புகிறது.