அன்பிற்கினிய பிரபு,
தாமதமாகத்தான் செய்தி அறிந்தேன். ‘’காவிரி போற்றுதும்’’ உடன் பல நாட்கள் இணைந்திருப்பவன் என்ற முறையில் பெருமிதம் கொள்கிறேன். எந்த விஷயமாயினும் அதில் நாம் காட்டும் அக்கறையும் தீவிரமுமே அடிப்படையான மாற்றங்களை உருவாக்கக் காரணமாக அமைகிறது. மிகக் கடுமையான எதிர்விளைவுகள் விஷயம் எவ்வளவு ஆழமானது என்பதைக் காட்டுகிறது. அரசின் மீதும் சட்டபூர்வமான வழிமுறைகளின் மீதும் தங்களுக்கு இருக்கும் நம்பிக்கை மகிழ்ச்சி தருகிறது. மெல்ல நடப்பினும் உரியன நிகழும் என நம்புவோம். உணர்வுபூர்வமான நமது ஒற்றுமையின் சிறப்பை மிக்க மகிழ்ச்சியுடன் உணரும் தருணம் இது. இந்த நிகழ்வுகள் உங்களுக்கு ஒரு பரீட்சை.
எப்போதும் அன்பும் பிரியமும்
ஆ