Thursday 15 December 2022

நடராஜக் கால்

 ஜம்பத்துக்குப் பேர் போனது தஞ்சாவூர் மாவட்டம் ( பழைய தஞ்சாவூர் மாவட்டம்). அந்த மாவட்டத்துக்காரர்கள் ‘வெட்டி ஜம்பம்’ என்றும் சொல்வார்கள். ‘’வாய் ஜம்பம்’’ என்றும் மேலும் ‘’சிறப்பித்து’’ச் சொல்லப்படுவதும் உண்டு. அவ்வாறான ஒரு ஜம்பப் பேர்வழி ஒருவன் தன் வாய் வார்த்தைகளால் தன்னிடம் வந்தவரின் மனதில் ஏற்படுத்த விரும்பிய கிலேசம் எதிர்பாராத ஒரு குரலால் முறியடிக்கப்படுகிறது. அதுவே தி.ஜா வின் ‘’நடராஜக் கால்’’.