Friday 31 March 2023

சீனாவின் கைக்கூலிகள்

மாவோயிஸ்டுகள் என்கிற எம் எல் என்கிற நக்சலைட்டுகள் சீன நாட்டிடம் பணம் பெற்றுக் கொண்டு ஜனநாயக நாடுகளின் அரசு அமைப்பினை சிதைக்கவும் கைப்பற்றவும் பணியாற்றக் கூடிய கைக்கூலிகள். பொதுமக்களை வெடிகுண்டு மூலம் கொலை செய்தல், அரசு ஊழியர்களை அழித்தல் ஆகியவை அவர்களின் செயல்பாடுகள். ஜனநாயக அமைப்பு மெதுவானது. அது மெதுவானதாக இருப்பதால் பொதுமக்களால் அதிருப்தியுடன் நோக்கப்படுவது. பொதுமக்களின் அதிருப்தியை பயன்படுத்தி ஜனநாயக அரசுக்கும் அதன் குடிமக்களும் இடையே இருக்கும் இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு அதனை மேலும் பெரிதாக்கி தான் பொருளியல் பலன்களைப் பெற்றுக் கொள்வது என்பதே நக்சலைட்டுகளின் வழிமுறை. அவர்களின் மாவோயிச சித்தாந்தம் அதனையே அவர்களுக்கு சொல்லித் தருகிறது.  

குடிமக்கள் எப்போதும் அரசை உற்று நோக்குவதில்லை. குடிமக்கள் அரசை முழுமையாக அறிவதும் இல்லை. அது அவர்களுக்கு முக்கியமான தேவையும் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் தங்கள் மனத்தின் சிறு அளவிலான பரப்பை அரசு என ஒரு அமைப்பு இருப்பதாக நம்புவதே எந்த அரசுக்கும் அடிப்படை. கோடிக்கணக்கான மக்கள் அரசு என்ற அமைப்பை மிகச் சிறு அளவிலேனும் நம்பும் போது ஏற்றுக் கொள்ளும் போது ( வரி செலுத்தும் போது) ஜனநாயக அரசாங்கம் செயல்பட ஆரம்பிக்கிறது. 

மாவோயிஸ்டுகள் என்கிற நக்சலைட்டுகள் குறித்து கேள்விப்படும் போது எண்ணம் கொள்ளும் போது பொதுமக்கள் ஒரு கேள்வியை மனதில் எழுப்பிக் கொள்ள வேண்டும். 

1. சீனா இன்று உலகில் மிக மோசமாக தனது சொந்த குடிமக்களின் உழைப்பைச் சுரண்டும் நாடு . ஒரு ஜனநாயக நாட்டில் சுரண்டல் நிகழ்கிறது எனக் கூறி ஆயுதம் ஏந்திய - ஏந்தும் மாவோயிஸ்டுகள் என்கிற நக்சலைட்டுகள் சீனாவிடம் கைக்கூலி பெற்றது- பெறுவது எதனால்?