Wednesday 28 February 2024

மாசி செவ்வாய்

வைத்தீஸ்வரன் கோவில் இறைவன் பிணி நீக்கும் மருத்துவன். ஜீவன்களுக்கு ஏற்படும் உடற்பிணியையும் மனப்பிணியையும் தன் அருளால் கருணையால் அன்பால் நீக்கும் மருத்துவன். எளிய மானுட உயிர்கள் அவன் முன் தங்கள் பிணி கூறி நிற்கின்றனர். பிணியும் வலியும் துக்கமும் மானுடர் எளிதில் உணர்வது. அவை நீங்க வேண்டும் என்பது மானுடரின் விருப்பம். அந்த விருப்பத்தை வைத்தீஸ்வரனிடம் பிராத்தனையாக முன்வைக்கின்றனர். முத்துக்குமரன் வலிமைக்கான கடவுள். அம்மையப்பனான வைத்தீஸ்வரன் தையல்நாயகியை வணங்கி அவர்களின் குமாரனான குமரக்கடவுளிடம் ஆற்றலும் வலிமையும் கோரி தினமும் நூற்றுக்கணக்கில் மானுடர் குழுமிக் கொண்டேயிருக்கின்றனர் வைத்தீஸ்வரன் சன்னிதியில். நேற்று மாசி செவ்வாய். சிவனுக்கும் முருகனுக்கும் உகந்த நாள். ஆலயம் சென்று இறைவனை வணங்கினேன்.