குளம் அமைத்தல் குறித்து நண்பர்கள் சிலரிடம் பேசினேன். நண்பர்கள் அனைவருமே பெரும் ஆர்வம் காட்டினார்கள். ஒருவரிடம் ஒரு விஷயத்தைக் கூறும் போது நாம் அதனை எவ்வளவு புறவயமாக வகுத்துக் கூற முடியுமோ அவ்வளவு கூறுகிறோம். அதன் மூலம் நாம் கவனிக்காத சில விஷயங்களும் உரையாடலின் போது வெளிப்பட வாய்ப்பு உருவாகிறது.