Saturday 3 August 2024

ஆடிப் பதினெட்டு

 இன்று ஆடி மாதம் 18ம் நாள். காவிரி வடிநிலப் பகுதிகளில் சிறப்பாக ஆடிப்பெருக்காகக் கொண்டாடப்படும் தினம். இந்த வருடம் காவிரி நீர் இன்னும் ஊரை வந்தடையவில்லை. 

கருநாடக மாநிலத்தின் பருவமழையால் காவிரி வெள்ளம் பெருக்கெடுத்து வந்து கொண்டிருக்கிறது. எனினும் தமிழக அரசால் தண்ணீரின் கணிசமான பகுதியை காவிரி, அரசலாறு, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில்  திறந்து விட இயலவில்லை. மாநில அரசுக்கு அதில் பெரிய அக்கறையோ ஈடுபாடோ இல்லை. ஒட்டு மொத்த காவிரி நீரும் கொள்ளிடத்தில் திறந்து விடப் படுகிறது. 

காவிரியுடன் மக்களுக்கு உணர்வுபூர்வமான தொடர்பு இருக்கும் வரையே வடிநிலப் பகுதிகளில் செழிப்பும் வளமும் இருக்கும். 

ஆறுதல் செய்தியாக காவிரி நீர் இன்று கும்பகோணம் வரை வந்தடைந்துள்ளது என அறிந்தேன். திருச்சிராப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் மக்கள் உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கு கொண்டாடியிருக்கக் கூடும்.