Thursday 19 September 2024

மாநில தகவல் ஆணையம் - விசாரணை

 14 மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தின் கோப்பினை முழுமையாக வழங்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரியிருந்தோம். முழுக் கோப்பு நமக்கு அளிக்கப்படவில்லை. எனவே தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி மாநில தகவல் ஆணையத்திடம் முழுக் கோப்பினைக் கேட்டு இரண்டாம் மேல்முறையீடு செய்திருந்தோம். அடுத்த வாரத்தில் மாநில தகவல் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கும் மனுதாரராகிய நமக்கும் மாநில தகவல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது.