Thursday, 18 December 2025

பயங்கரவாத ஊற்று

பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத ஊற்று. தனது சொந்த குடிமக்களையும் உலகின் எல்லா நாடுகளின் சாமானியக் குடிமக்களையும் படுகொலை செய்வதை தன் வரலாறாகக் கொண்ட பயங்கரவாதக் குழு பாகிஸ்தான். அங்கே உண்மையான அதிகாரம் இராணுவத்துக்கும் அதன் உளவு அமைப்புக்குமே உள்ளது. இது தவிர மத அடிப்படைவாதிகளும் பெருவணிகர்களும் அதிகாரம் கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் அதிகாரம் என்பது பெயரளவுக்கானதே.  பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் அனுப்புவதே அவர்களின் செயல்திட்டமாக இருக்கிறது. அணு ஆயுதம் தொடங்கி எல்லா வகையான அழிவு வேலைகளிலும் அவர்களுக்கு கடந்த கால வரலாறு இருக்கிறது. உலகெங்கும் இருக்கும் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் கள்ள ஆயுதச் சந்தையில் பெரும் பங்கினைக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். உலகெங்கும் நடக்கும் போதை மருந்து கடத்தலிலும் முக்கிய பங்கு பாகிஸ்தானுக்கு உண்டு. அபாயமான ஒரு நாட்டை நாம் அண்டை நாடாகக் கொண்டிருக்கிறோம். பாகிஸ்தானை பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஊற்றுமுகமாய் இருக்கும் சித்தாந்தத்தை இந்தியக் குடிகள் தெளிவாக அடையாளம் காண வேண்டும். அது உலக நலனுக்கு உகந்தது.