Friday, 10 April 2026

கல்வி குறித்த யோசனைகள்

நண்பரின் கல்வி நிலையத்தை எவ்விதம் விரிவாக்குவது என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். நம் நாட்டின் வரலாற்றில் கல்வி நிலையம் என்பதைத் துறவிகளே நடத்தியிருக்கிறார்கள். அரசுகள் அவற்றுக்கு ஆதரவு அளித்திருக்கின்றன. ஜனநாயக அரசியலில் அரசாங்கமே கல்வி நிலையங்களை நடத்துகிறது. தனியாராலும் கல்வி நிலையங்கள் நடத்த முடிகிறது. இன்று கல்வி நிலையம் நடத்துவது என்பது பெரும் முதலீடு தேவைப்படும் செயல். எனினும் அது ஓர் இலட்சியவாத செயல்பாடும் கூட.  

சிறுவனாயிருந்த நாட்கள் முதலே மொழி மீது ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன். படைப்பூக்கம் கொண்ட மனநிலை கொண்டிருக்கிறேன். வணிகத்தில் ஈடுபடுகிறேன். இவையே இந்த யோசனைகள் உருவாகக் காரணம்.