Tuesday, 19 May 2026

மகிழ்ச்சியளிக்கும் ஒரு பொருள் (நகைச்சுவைக் கட்டுரை)


சென்ற வாரம் ஒரு பொருளை வாங்க நினைத்தேன். ஒரு பொருளை வாங்க வேண்டும் என நான் நினைப்பது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடக்கும். நினைத்ததை வாங்க மேலும் பல ஆண்டுகள் ஆகும்.  இணையத்தில் தேடி ஒரு பொருளைக் கண்டடைந்தேன். அதன் பெயர் ‘’ஃபாரடே பை’’. இது என்ன செய்யும் என்றால் இதனுள் அலைபேசியை வைத்து விட்டால் அலைபேசிக்கு சிக்னல் ஏதும் வராது. அதனால் அலைபேசிக்கு எந்த அழைப்பும் வராது. ஏதாவது பேச வேண்டும் என்றால் ‘’ஃபாரடே பை’’யிலிருந்து ஃபோனை எடுத்துப் பேசி விட்டு மீண்டும் உள்ளே வைத்து விடலாம். 

இப்போதே பெரும்பாலும் எனது அலைபேசியை ‘’சைலண்ட் மோட்’’ல் தான் வைத்திருப்பேன். அதை விடவும் இந்த உபகரணம் மேலும் பயன் தருவதாக இருக்கக் கூடும். 

இந்த ’’ஃபாரடே பை’’ பயன்பாட்டுக்குப் பின் தொழில் நிமித்தம் என்னுடன் பேச வேண்டியவர்களை காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 வரை மட்டுமே பேசுமாறு கூறலாம் என இருக்கிறேன். அந்த நேரம் மட்டும் ஃபோன் என்னுடன் இருக்கும். 

இந்த பையை வாங்கிய பின் என்ன யோசிக்கிறேன் என்றால் காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை ஃபோனை ஆன் செய்து வைத்து விட்டு மற்ற நேரத்தில் சுவிட்ச் ஆஃப் செய்து விடலாமே இதற்கு ஏன் ஃபாரடே பை வாங்கினோம் என யோசிக்கிறேன். பல நாட்கள் அந்த வேலைநேரத்தில் கூட வெளிஅழைப்புகளை விரும்புவதில்லை. அத்தகைய தருணங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என இருக்கிறேன்.