அனுப்புநர்
&&&&&
&&&&
&&&
பெறுநர்
மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை
நகல் மனு : கனம் வருவாய்த்துறை அமைச்சர்
ஐயா,
பொருள் : மனுநீதி நாள் முகாமில் மனுதாரர்களுக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டு வழங்கக் கோரிய கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கடிதம்
ஜூன் 1, ஜூன் 8 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மனுதாரர்களுக்கு உடனடியாக மனுக்களுக்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படாமல் பலமணி நேரம் தாமதமாக வழங்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது . அதன் நகல் வருவாய்த்துறை அமைச்சருக்கும் அனுப்பப்பட்டது. இன்று ஜூன் 15 ம் தேதி மனுநீதி நாள் முகாமில் ஒப்புகைச்சீட்டு மனுதாரர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது என்பதை நான் நேரில் கண்டேன். கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
&&&
இடம் : மயிலாடுதுறை
நாள் : 15.06.2026