இன்று காலை எனது நண்பருக்கு ஃபோன் செய்தேன். அவர் ஒரு துவக்கப்பள்ளி ஆசிரியர். அவரிடம் எப்போது சாவகாசமாக ஃபோனில் பேச முடியும் என்று கேட்டேன். மாலை நேரத்தில் என்றார். இப்போது அதாவது இந்தக் காலகட்டத்தில் ஏதும் முக்கிய பணி இல்லையே என்று கேட்டேன். ‘’இருக்கிறது’’ என்றார். ’’என்ன பணி?’’ என்றேன்.
மிகவும் சோகமாக ‘’டெட் எக்ஸாம் வருது’’ என்றார்.
‘’அதை ஏன் இவ்வளவு சோகமா சொல்றீங்க?’’ என்றேன்.
‘’தீவிரமா பிரிபேர் செஞ்சுட்டு இருக்கன்’’
‘’தீவிரமாவா?’’
’’ஆமா சிலபஸ் மாத்தியிருக்காங்க. அதான் தினமும் ரொம்ப நேரம் படிக்கறன்’’ என்றார்.
‘’பதட்டமா இருக்கா?’’
சற்று தயங்கி ‘’ஆமா ரொம்ப பதட்டமா இருக்கு’’ என்றார்.
‘’நீங்களே ஆசிரியர். தேர்வு எழுத தேர்வை நினைச்சு நீங்க பதட்டப்படலாமா ?’’ என்றேன்.
‘’டெட் எக்ஸாம் முக்கியமாச்சே?’’ என்றார்.
’’எத்தனை மார்க்குக்கு எக்ஸாம் ? பாஸ் பண்ண 80% எடுக்கணுமா?’’ என்றேன்.
‘’150 மார்க்குக்கு எக்ஸாம் எழுதணும். அதுல 80 மார்க் எடுக்கணும் பாஸ் செய்ய’’ என்றார்.
‘’ஐம்பது பர்செண்ட் மார்க் எடுத்தா பாஸ்ங்கறதுக்குத் தான் இவ்வளவு பதட்டமா ?’’ என்றேன்.
‘’ஆமா’’ என்றார்.
‘’இந்த மாதிரி ஆட்களை நம்பித்தான் தமிழ்க் குடும்பங்கள் அவங்க குழந்தைகளோட கல்வியை ஒப்படைக்கிறாங்க’’ என்றேன்.
நண்பர் அமைதியாக இருந்தார்.
‘’நீங்க ரொம்ப ஸ்மார்ட் ஆச்சே ? நீங்க ரொம்ப இண்டெலிஜெண்ட் ஆச்சே? ஏன் டெட் எக்ஸாமைக் கண்டு பயம் ?’’ என்றேன்.
‘’பேப்பர் டஃப் ஆ இருந்தா?’’ என்றார்.
‘’எதைப் பத்தியும் நினைச்சு பதட்டப்படாதீங்க. டெய்லி கன்சிஸ்டெண்ட்டா பிரிபரேஷன் மட்டும் செய்ங்க. நல்ல ஸ்கோர் எடுத்து பாஸ் செய்வீங்க ‘’ என்றேன்.
நண்பர் நம்பிக்கை கொண்டார்.