Friday, 15 July 2022
தபால் வங்கிகள்
Wednesday, 13 July 2022
ஆசிரியர்
இந்தியாவின் பாரம்பர்யமான கல்வி மிக இளம் வயதிலேயே துவங்குகிறது. மொழியும் கணிதமும் மனனம் செய்தல் என்ற முறையிலேயே மாணவனின் அகத்தில் நிறையும் வண்ணம் அந்த முறைமை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இளம் குழந்தையின் அகம் விருப்பு வெறுப்புகள் இல்லாதது. பயிற்சிக்கு திறந்த மனத்துடன் இருப்பது. செம்மை செய்யப்பட்ட நிலத்தில் விதையிடுதலைப் போல குழந்தையின் அகத்திற்கு கல்வி அளிக்கப்பட்டிருக்கிறது.
விவசாயக் கல்வியும் தொழிற்கல்வியும் கூட அவ்விதமே மாணவர்களுக்கு கிடைத்திருக்கிறது. தந்தையும் பாட்டனாரும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களும் ஆசிரியர்களாக இருந்து கல்வி அளித்திருக்கின்றனர். அந்த மரபு இப்போதும் தொடர்கிறது. தந்தையை தனது ஆசானாகவும் கொள்ளும் பேறு இப்போதும் பலருக்குக் கிடைக்கிறது.
’’உபநிஷத்’’ என்ற சொல்லுக்கு ஆசிரியரின் அருகிருத்தல் என்று பொருள். இந்திய மரபில் ஆசிரியர் மாணவனை தன் உடனிருக்க அனுமதிக்கிறார். அவ்வாறு ஆசிரியர் ஒருவர் தன்னை அனுமதித்தலையே மாணவன் குருவருள் எனக் கொண்டு பெருமதிப்பு கொள்கிறான். மாணவனின் அகநிலை வளர்ச்சிக்குக் குருவின் அருள் காரணமாக அமைவதால் ஆசிரியனை இறைவடிவமாகக் கொள்கிறது இந்திய மரபு.
ஆலமர்க் கடவுளான தென்திசை முதல்வன் உலக உயிர்களின் அறியாமையைப் போற்றும் ஆசானாக விளங்குகிறான். அடித்தட்டு மக்களின் தலைவனான இளைய யாதவன் அர்ஜூனனின் ஆசிரியனாக அமைந்து கீதையை உரைத்தான். தன் அகக் கருணையின் வெள்ளத்தால் உலகம் முழுமையும் அணைத்துக் கொண்ட பகவான் புத்தரும் மக்கள் துயர் தீர மக்களிடம் ஒரு ஆசிரியனாக இருந்து பேசியவரே.
மேலான மானுட வாழ்வை நோக்கி மானுடர்களை இட்டுச் சென்ற - இட்டுச் செல்லும் அனைவரும் ஆசிரியர்களே. அந்த ஆசிரியர்கள் மானுடத்தால் என்றும் வணங்கப்படுவார்கள்.
Sunday, 10 July 2022
சி.பி.கி.ரா.ம்.ஸ்
Saturday, 9 July 2022
நோக்க நோக்க
Thursday, 7 July 2022
வாய்ப்பு ( நகைச்சுவைக் கட்டுரை)
Wednesday, 6 July 2022
காணும் பொருளாய் காண்பதெல்லாம் காட்டுவதாய்
Sunday, 3 July 2022
சந்திப்பு
வியாபகம்
Saturday, 2 July 2022
இடம் பொருள் மரம்
இன்று காலை அலைபேசியில் ஒரு அழைப்பு. எண்ணைப் பார்த்தால் வெளிநாட்டு அழைப்பு என்று தோன்றியது. வெளிநாடுகளிலிருந்து வாசகர்கள் கணிசமாக இப்போது அழைக்கிறார்கள். யாராக இருக்கும் என்று யோசித்தவாறு ஃபோனை எடுத்தேன். எனது வாசகரும் வகுப்புத் தோழருமான நண்பர் அழைத்திருந்தார். இந்தியாவில் சில ஆண்டுகள் பணியாற்றி விட்டு பின்னர் பல ஆண்டுகள் ஜப்பானில் பணி புரிந்தார். ஜப்பான் அவருக்கு மிகவும் பிடித்த நாடு. இருப்பினும் அங்கிருந்து அமெரிக்கா செல்ல நேர்ந்தது. அமெரிக்காவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிகிறார். பால்ய சினேகிதர்கள் என்றாலும் காலம் எங்கள் இருவரையுமே மாற்றி அமைத்திருக்கிறது. அனுபவம் எங்கள் இருவரையும் ஒரு குறிப்பிட்ட பக்குவத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. அவரது அழைப்பு பெரும் மகிழ்ச்சி தந்தது.
நண்பன் தான் முதலில் ஆரம்பித்தான். நலம் விசாரித்த பின் நண்பன் ‘’என்ன செஞ்சுகிட்டு இருக்க?’’ என்றான். நான் செய்து கொண்டிருக்கும் ஏகப்பட்ட வேலைகள் முண்டியடித்துக் கொண்டு என் மனதில் வந்து நின்றன. எதை முதலில் சொல்வது என்று யோசித்தேன். ‘’ நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கன்னு நான் சொல்லட்டுமா? ஒவ்வொரு நாளும் உன்னோட பிளாக்-ஐ வாசிக்கறேன்’’ என்றான். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
‘’பிரபு! நான் ஒரு விஷயம் முடிவு செஞ்சிருக்கன். அதை நீதான் முன்னால இருந்து செஞ்சு கொடுக்கணும். ‘’
’’ 3 ஏக்கர் விவசாய நிலம் வேணும். நல்ல இடமா பாரு. கிரயம் பண்ணிடுவோம். அதுல 1000 தேக்கு மரம் வளர்க்கணும். ஏற்பாடு செஞ்சுட்டு சொல்லு. பணத்தை ஒரே பேமெண்ட்டா அனுப்பி வச்சுடறன்.’’
எனது மனம் நெகிழ்ந்து விட்டது. எத்தனையோ கண்டங்கள் கடல்கள் தாண்டி அவன் இருக்கிறான். ‘’காவிரி போற்றுதும்’’ சாதித்தது என்ன என்ற கேள்வி எனக்கு அவ்வப்போது எழும். நாம் நிச்சயமாக ஏதோ ஒன்றை சாதிக்கிறோம் என்ற தெம்பை இந்த அழைப்பு கொடுத்தது.