உலகின் முதல் காவியம் இராமாயணம். இராமன் கதை பாடவே கவிதை பிறந்தது என்கிறது நம் மரபு.
இராம கதை விதவிதமாக தொடர்ந்து பாடப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
18ம் நூற்றாண்டில் தில்லையாடியில் பிறந்த சைவரான அருணாசலக் கவிராயர் கம்பன் மீது ஈடுபாடு கொள்கிறார். கம்பன் மீது கொண்ட ஆர்வத்தால் இராம கதையை கீர்த்தனைகளாகப் பாடுகிறார். தமிழ் மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வம் அறிந்த தருமபுரம் ஆதீனத்தின் சைவத் துறவிகள் அவருக்கு சீர்காழியில் வீடொன்றை அளித்து அவரை ஆதரிக்கின்றனர்.
ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் சிறந்த உதாரணம் அருணாசலக் கவிராயரின் வாழ்வு.