உடலும் மனமும் பலவிதங்களாக இணைந்திருக்கிறது. ஒத்திசைவுடன். முரண்பட்டு. ஒன்றுபட்டு . வேறுபட்டு. பூசலிட்டு. ஒற்றுமையாகி. மனம் உடலைத் தன் ஏவலனாக்குவதே அதிகம். உடலின் நலனுக்கு எதிரான பாதையில் கூட மனம் உடலை இட்டுச் செல்லும். உடல் செயலற்று மனம் சொல்வதைக் கேட்கும். உடலும் மனத்தை சிந்திக்காமல் ஆக்குவது உண்டு. உடலும் மனமும் துல்லியமாக ஒத்திசையும் போது பல அற்புதங்கள் நிகழ்கின்றன. அசாத்தியமான பல விஷயங்கள் சாத்தியமாகின்றன.