Friday, 20 February 2026

எழுதுதல்

 எனது நண்பர் ஒருவர் தீவிரமான இலக்கிய வாசகர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய வாசிப்பு கொண்டவர். புனைவுகள் அ-புனைவுகள் என அனைத்தையும் வாசிப்பவர். சில மாதங்களுக்கு முன் அவர் அறிமுகமானார். சிலமுறை சந்தித்தோம். சிலமுறை உரையாடினோம். அவர் எழுதக் கூடியவர் என்று எனக்குத் தோன்றியது. அதனை அவரிடம் அவ்வப்போது தெரிவித்தேன். நேற்று அவர் எழுதிய சிறுகதையை எனக்கு அனுப்பியிருந்தார். எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது ஆவல்.