சில நாட்களுக்கு முன், தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு பயணி ரயில்வே பிளாட்ஃபாரத்தில் மேலே இருக்கும் விதமான சிறு கூடாரம் ஒன்றை அமைத்து அதனுள் உறங்கிக் கொண்டிருந்தார். நான் பார்த்த போது நேரம் இரவு 10 மணி. அவரது ரயில் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ இருந்திருக்கக் கூடும். மலையேறுபவர்கள் இதனைப் பயன்படுத்துவார்கள். மிகக் குறைவான எடை கொண்டது. மொத்த கூடாரத்தையும் சிறு பைக்குள் அடக்கி வைக்க முடியும். கையால் தூக்கிச் செல்லும் அளவு மிகக் குறைவான எடை கொண்டது. எனக்கு அக்காட்சி பெரும் ஆர்வம் அளித்தது.