Wednesday, 8 April 2026

எல்லைப் பயணம்

ஊரில் மதியம் 1.30 அளவில் பகல் விரைவு வண்டி இருக்கிறது. அதில் 6 மணி நேரம் பயணிக்க வேண்டும். இரவு 8 மணி அளவில் அவ்வண்டியின் கடைசி சேருமிடம் சென்றடைய முடியும். அங்கிருந்து இரவு 10 மணிக்கு ஒரு ரயிலைப் பிடிக்க வேண்டும். அந்த ரயில் 32 மணி நேரம் பயணிக்கும். இரண்டாம் நாள் காலை 7 மணி அளவில் சேருமிடம் சென்று சேரும். அங்கே 12 மணி நேரம் காத்திருக்க வேண்டும். மாலை 7 மணிக்கு ஒரு ரயில் புறப்படும். அந்த ரயில் 12 மணி நேரப் பயணம் செய்யும். அங்கே இருந்து ஒரு பேருந்தைப் பிடிக்க வேண்டும். அப்பேருந்து 30 மணி நேரம் பயணித்து ஒரு இடத்தில் சென்று சேரும். ஞாயிற்றுக்கிழமை ஊரில் கிளம்பினால் சனிக்கிழமை நான் செல்ல உத்தேசித்திருக்கும் இடத்தைச் சென்றடைய முடியும். அங்கே 3 நாட்களாவது இருக்க வேண்டும். அதன் பின் அதே விதமாக அங்கிருந்து புறப்பட்டு ஊர் வந்து சேர வேண்டும். இந்தப் பயணம் நிகழ்ந்தால் என் வாழ்வில் மேற்கொண்ட மிகப் பெரிய பயணங்களில் ஒன்றாக இது அமையக் கூடும்.