Thursday, 30 April 2026

புள்ளரவம்

 வசந்தத்தின் மாலை
முழு பகலும் வெம்மை ஏந்திய மரம்
சோர்ந்திருந்தது
சிறிய கிளைகளில்
புள்ளினங்கள் அமர
அசையத் தொடங்கியது மரம்
கிளைகளை அசைத்து அசைத்து
ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன
சிறகு கொண்ட உயிரினங்கள்
ஆசுவாசம் நிறைந்திருந்தது அவ்வொலியில்
கடந்து செல்பவன் அகத்தில் 
மரத்தில் கிளையில் இலையில்
காற்றில்
நிறையும் ஆசுவாசம்