வசந்தத்தின் மாலை
முழு பகலும் வெம்மை ஏந்திய மரம்
சோர்ந்திருந்தது
சிறிய கிளைகளில்
புள்ளினங்கள் அமர
அசையத் தொடங்கியது மரம்
கிளைகளை அசைத்து அசைத்து
ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன
சிறகு கொண்ட உயிரினங்கள்
ஆசுவாசம் நிறைந்திருந்தது அவ்வொலியில்
கடந்து செல்பவன் அகத்தில்
மரத்தில் கிளையில் இலையில்
காற்றில்
நிறையும் ஆசுவாசம்