Tuesday, 31 December 2024

முயற்சி திருவினையாக்கும்

 எனது நண்பர் ஒருவர் ஊரில் இரண்டு மனைகளை வாங்கியுள்ளார். அதில் இருந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு அதில் கட்டிடம் கட்டுவது அவரது திட்டம். அந்த மனைகளில் இருந்த மரங்களே அவர் நிர்மாணிக்க உள்ள வீட்டின் ஜன்னல், கதவுகள் ஆகியவற்றுக்கு போதுமானதாக இருக்கும் என கணக்கிடுகிறார். என்னிடம் அது பற்றி பேசிக் கொண்டிருந்தார். இருவரும் சேர்ந்து விவாதித்தோம். 

உலகம் மேடு பள்ளங்களாலும் ஏற்றம் தாழ்வுகளாலும் ஆனது. இது ஒரு அடிப்படை உண்மை. இந்த உண்மையிலிருந்தே அடுத்தடுத்த உண்மைகளுக்கு செல்ல முடியும். சென்று சேர முடியும். 

கடலை ஒட்டி வாழ்பவர்களுக்கு வாழ்க்கை ஒரு விதமாக இருக்கிறது. நதியை ஒட்டி வாழ்பவர்களுக்கு வாழ்க்கை வேறு விதமாக இருக்கிறது. மலையில் வாழ்பவர்களுக்கு இன்னொரு விதம். பாலையில் வாழ்பவர்கள் தனி விதம். 

நான் வாழும் பிரதேசத்தில் என்னால் முடிந்த அளவு விவசாயிகளின் பொருளியல் சிக்கலைத் தீர்க்க முயல வேண்டும் என்பது எனது விருப்பம். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளில் அது ஒன்று. இதற்காக தொடர்ந்து விவசாயிகளை சந்திக்கிறேன். என்னுடைய தொழில் விவசாயம் அல்ல; விவசாயம் சார்ந்து எனக்கு நேரடி அனுபவம் இல்லை. இந்த இரண்டு விஷயங்களும் எனது எல்லை. இருப்பினும் இந்த எல்லையை வெற்றிகரமாக ஒவ்வொரு முறையும் கடந்தே விவசாயிகளுடன் உரையாடுகிறேன். ஒரு விவசாயி விவசாயத்தில் நேரடி அனுபவம் உள்ளவர். அவருக்கு மண் குறித்து தெரியும் ; நீர்ப்பாய்ச்சல் தெரியும்; களைகள் குறித்து தெரியும்; பயிர்கள் கதிர் வைப்பது தெரியும். கதிரை எப்போது அறுப்பது என்பதும் தெரியும். இருப்பினும் விவசாயத்தை எவ்விதம் லாபமான ஒன்றாக மாற்றிக் கொள்வது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அது அவர்களின் எல்லை. எனது எல்லையும் அவர்களின் எல்லையும் சந்திக்கும் இடத்தில் நாங்கள் உரையாட ஒரு சிறு சாத்தியம் இருக்கிறது. அந்த இடத்தைப் பயன்படுத்தியே நான் உரையாடுகிறேன். என்னால் முடிந்ததைச் செய்கிறேன். அந்த திருப்தியையே மட்டுமே நான் பெற முடியும். அது எனக்குத் தெரியும். அது எனக்குப் போதும். இருப்பினும் ஒவ்வொரு முறையும் என்னுடைய முயற்சியை பலமடங்காக்கவும் இன்னும் பல இடங்களில் மரப்பயிர்களைக் கொண்டு வரவும் விரும்பிக் கொண்டே இருப்பேன். அது என் சுபாவம். 

எனது நண்பர் ஐ.டி கம்பெனியில் பணி புரிபவர். அவரது பூர்வீகமான 3 ஏக்கர் நிலத்தில் அவரது தந்தை நெல் விவசாயம் செய்து கொண்டிருந்தார். மிக சொற்பமான லாபம் அல்லது லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்ற நிலை அல்லது நஷ்டம் என இந்த மூன்று சாத்தியங்களுக்கு உட்பட்டே அவர்களது விவசாயம் பருவத்துக்கு பருவம் நடைபெற்று வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சந்தித்துக் கொண்ட போது மரப்பயிர் குறித்து எனக்கு ஆர்வத்தாலும் நம்பிக்கையாலும் வியப்பு கொண்ட அவர் தனது 3 ஏக்கர் நிலத்தில் முழுமையாகத் தேக்கு பயிரிட முன்வந்தார். 100 சதவீதம் எனது ஆலோசனைகளை முழுமையாக செயலாக்குவேன் என உறுதி தந்தார். மனிதர்கள் கூடியே லௌகிகம் ஆற்றுகிறார்கள். எனவே உள்ளிருக்கும் மனிதர்களின் சுபாவங்கள் அவர்கள் ஆற்றும் லௌகிகத்திலும் பிரதிபலிக்கும். இந்த புரிதல் எனக்கு இருந்ததால் ஒவ்வொரு நகர்வையும் அளந்து வைத்தேன். அந்த நிலத்தில் 900 தேக்கு கன்றுகள் நடப்பட்டன. நடப்பட்டு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகி விட்டன. எல்லா மரங்களும் நன்றாக இருக்கின்றன. இன்னும் 12 ஆண்டுகள் கழித்து அவர் நிலத்தில் இருந்து அவருக்கு குறைந்தபட்சம் எட்டு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும்.  விவசாயம் மூலம் கிடைத்த வருமானம் என்பதால் அதற்கு வருமானவரி கிடையாது. முழுத் தொகையும் சேதாரமின்றி கிடைக்கும். 

இந்த கணக்கீடு எனக்குத் தெரியும் என்றாலும் இரண்டு மனைகளை வாங்கிய நண்பர் மரம் வெட்டி சேகரித்து வைத்திருக்கும் மரத்துண்டுகள் அந்த கணக்கை உறுதி செய்தன. 

ஐ டி நிறுவன நண்பரின் தேக்கு தோட்ட செயல்முறையால் ஈர்க்கப்பட்டு மேலும் இருவர் தங்கள் நிலத்தில் தேக்கு பயிரிட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோருக்கு இந்த விஷயத்தைக் கொண்டு நூற்றுக்கணக்கான விவசாயிகளை கோடீஸ்வரர்களாக ஆக்க வேண்டும் என என் அகம் விழைகிறது. நான் அவர்களிடம் ஒரு சிந்தனையை மட்டுமே விதைக்கிறேன். சாதிப்பது அவர்களே. 

தேக்கிலிருந்து வருமானம் வர 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது ஒரு விஷயம். பல விவசாயிகளுக்கு அந்த தயக்கம் இருப்பதைக் கண்டிருக்கிறேன். 

இரண்டு மனைகள் வாங்கிய நண்பரின் உரையாடலிலிருந்து எனக்கு இன்னொரு விஷயம் புரிந்தது. அதாவது ஒரு ஏக்கர் நெல் வயலில் 300 வேப்ப மரங்கள் நட்டால் ஐந்து ஆண்டுகளில் அந்த விவசாயிக்கு ரூபாய் பதினைந்து லட்சம் கிடைக்கும். நெல் விவசாயத்தால் கிடைக்கும் என உத்தேசிக்கும் லாபத்தை விட 3 மடங்கு. வேப்ப மரங்களுக்கு மத்தியில் பூசணி பயிரிடலாம். அதன் மூலமும் லாபம் கிடைக்கும். 

வேப்ப மரங்களின் வளர்ச்சிக்கு எந்த தடையும் இல்லை. பராமரிப்பு ஏதும் இல்லை. மிகக் குறைவான தண்ணீர் போதும். 

புது ஆண்டு பிறக்க உள்ள நிலையில் ’’காவிரி போற்றுதும்’’ பணிகளில் தேக்குடன் வேம்பு இணைந்திருப்பது உற்சாகத்தைத் தருகிறது. 

Monday, 30 December 2024

எனது படைப்புகள் - மறுபிரசுரம்

     2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை 22 நாட்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்தேன். அப்பயணம் குறித்த  பயணக் கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. அதன் இணைப்பு


காவிரியிலிருந்து கங்கை வரை - பகுதி 1

அதன் இரண்டாம் பகுதியின் இணைப்பு

ஹம்பி - நிலவைக் காட்டும் விரல்

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்











வருகை              





இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1   யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3   யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5

ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரைகள் & கடிதங்கள்


சுப்பு ரெட்டியார்         



வீரப்ப வேட்டை                         







Sunday, 29 December 2024

கும்பகோணம் கதைகள்

கஞ்சா மடம் - ந.பிச்சமூர்த்தி

 உலகை முக்குணங்களின் (சத்வ ரஜோ தமோ) கூட்டிருப்பாகக் காண்கிறது இந்திய மரபு. ஜீவன்கள் எக்குணம் மிகுந்து எக்குணத்தில் பிணைந்து ஜீவித்திருக்கின்றன என்பதே ஒவ்வொரு ஜீவனின் பிறவிக்கதை. ஒரு சாமியார் மடம். உலகியல் அமைப்புகளில் இருந்து விலகி வந்தவர்களின் இடம். உலகியல் பொருளியல் அடிப்படைகளால் ஆனது அல்லது பொருளியல் அடிப்படைகளாலும் ஆனது. ஒரு பம்பரம் உருவாகி கடையில் விற்பனையாகி சிறுவர்களின் கைக்கு வருவது வரையிலான பொருளியல் இயங்குமுறையை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர் சாமியார் மடத்து சாமியார்கள். அதை பேசி விவாதித்து விளக்கம் கொடுத்து மகிழ்ந்திருக்கின்றனர். ஒரு ஜோல்னாபையில் கஞ்சா சரக்கு இருக்கிறது. அனைவரும் கஞ்சா புகை இழுத்து மயக்கத்தில் ஆழ்கிறார்கள். நாளில் ஒரு வேளையாயினும் திருப்தியான உணவருந்தி கஞ்சா புகை இழுத்து மயக்கம் கொண்டு சித்தர் பாடல்களில் சிலவற்றைப் பாடி ஊர்வலம் வருவது கஞ்சா மட சாமியார்களின் தினசரியை. மடத்து சாமியார் அல்லாத சாமியார்களுக்கு உணவு கொண்டு வந்து பரிமாறும் ஆண்டியப்பன் பெரிய சாமியின் கஞ்சா பங்கை புகைத்து மயங்கி விடுகிறான். பெரிய சாமி அவன் தலையில் தண்ணீர் கொட்டி அவன் மயக்கத்தைக் கலைக்கிறார். சாமானியன் பொருளைப் பற்றி நிற்கிறான். கஞ்சா மடம் கஞ்சாவில் மட்டுமே மயங்கி நிற்கிறது.  பொருளியல் வேட்கையை விடவும் கூரானது பொருளியலுக்கு அப்பால் இருப்பதாக நினைத்து மயங்கியிருப்பவர்களின் மயக்கம். 

வீரம்மாளின் காளை - கு.ப.ராஜகோபாலன்

இந்திய மரபு மானுட வாழ்க்கை பந்த பாசங்களால் ஆனது. பந்த பாசங்கள். பந்தம் என்பது பிணைப்பு. சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது போல. எங்காவது நகர வேண்டுமென்றால் செல்ல வேண்டுமென்றால் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை அறுத்தாக வேண்டும். பாசம் என்பது வழுக்கச் செய்வது. பந்தத்தால் கட்டப்பட்டு பாசத்தால் வழுக்கிச் செல்வதாக இருக்கிறது எளிய மானுட வாழ்க்கை. 

கள்ளர் பெண்ணான வீரம்மாளுக்கு தன் மாமன் காத்தான் மேல் கொள்ளை பிரியம். அவளை மணக்க வேண்டுமெனில் அவளது காளையை ஜல்லிக்கட்டில் ஏறு தழுவ வேண்டும். யாருக்கும் வசப்படாத காளையை போராடித் தழுவி அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் துணியை அவிழ்க்கிறான் காத்தான். விதியின் கணம் ஒன்றில் காளை காத்தான் வயிற்றில் தன் கொம்பை ஏத்தி விடுகிறது. சாவின் விளிம்பில் வீரம்மாளிடம் காளை கழுத்தில் கட்டப்பட்டிருந்த துணியை அளித்து விட்டு கண் மூடுகிறான் காத்தான். ஜல்லிக்கட்டில் ‘’தோத்த கழுதை’’க்கு ரோஷமா என்று கூறி காளை மீது வேல் பாய்ச்சுகிறாள் வீரம்மாள். வீரம்மாளுக்கு தான் காதலித்த மாமனைக் கொன்று விட்டதே என காளை மேல் வருத்தம் இல்லை; ஜல்லிக்கட்டில் தான் வளர்த்த காளை தோற்று விட்டதே என்னும் வருத்தமே இருக்கிறது. காத்தானுக்கு சாகிறோமே என்ற வருத்தம் இல்லை ; வீரம்மாளுக்காக காளையை வென்றோம் என்ற மகிழ்ச்சியே இருக்கிறது. மாமனையும் இழந்து காளையையும் கொன்று விட்டு வீரம்மாள் அடையும் உணர்வு எவ்விதமானது என்பதை வாசகனிடம் விட்டு விடுகிறார் ஆசிரியர். 


 கல் நாயனம் - கி.ரா.கோபாலன்

 நாகேசன் ஒரு சிற்பி. முத்துக்குமரன் ஒரு நாதஸ்வரக் கலைஞன். அஞ்சனா நாகேசனின் தங்கை. அஞ்சனாவும் முத்துக்குமரனும் காதலர்கள். சகஜமான ஒரு உரையாடல் ஒன்றில் சிறு பூசல் உருவாகிறது நாகேசனுக்கும் முத்துக்குமரனுக்கும். அதாவது கல்லில் ஒரு நாயனம் செய்ய முடியுமா என இசைக்கலைஞன் சவால் விட அப்படி ஒன்று உருவாக்கினால் அதனை சுருதி சுத்தமாக வாசிக்க உன்னால் முடியுமா என பதில் சவால் விடுகிறான் சிற்பி. கல் நாயனத்தை சுருதி சுத்தமாக வாசிக்காமல் போனால் அஞ்சனாவை கல்யாணம் செய்யாமல் போவேன் என மேலும் ஒரு விஷயத்தையும் சொல்லி சவாலை இன்னும் தீவிரமாக்குகிறான் இசைக்கலைஞன். அஞ்சனா இவர்கள் சவாலுக்கு மத்தியில் தன் காதல் சிக்கிக் கொண்டதே என கலங்குகிறாள். கல் நாயனம் சுருதி சுத்தமாக முத்துக்குமரனால் வாசிக்கப்பட்டால் இனி உளியையே தொடுவதில்லை என அறிவிக்கிறான் நாகேசன். கல் நாயனம் செய்யப்படுகிறது. சுருதி சுத்தமாக வாசிக்கவும் படுகிறது. போட்டியில் வென்ற முத்துக்குமரன் நாகேசனின் சிற்பத் திறனை மெச்சுகிறான். அவன் சிற்பியாக தொடர்ந்து செயல்படுவேன் என்று அறிவித்தால் மட்டுமே அஞ்சனாவை மணப்பேன் என்கிறான். அனைத்தும் சுபமாக நிகழ்கின்றன. 

மனித தெய்வம் - துரோணன்

தங்கை கொலை செய்யப்படுகிறாள். தங்கையைக் காக்க இயலாமல் போனோமே எனக் கதறும் அண்ணன் மீதே கொலைப்பழி சுமத்தி பல ஆண்டுகள் சிறைக்கு அனுப்பி வைக்கிறான் கொலையாளி. சிறைவாசம் முடிந்து ஊர் திரும்புகிறான் அண்ணன். சிறையிலிருந்த ஒவ்வொரு கணமும் கொலை என்ற எண்ணத்தை மட்டுமே அடை காத்திருக்கிறான். கொலையாளி வீட்டுக்கு வரும் போது அந்த வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கொலையாளியின் மகள் தீயில் சிக்கியிருக்கிறாள். உள் நுழைய யாருக்கும் துணிவில்லை. சிறையிலிருந்து வெளிவந்த கைதி தீக்குள் நுழைந்து தன் உயிரைத் தந்து அவள் உயிரைக் காக்கிறான். கொலை எண்ணத்தையே எண்ணிக் கொண்டிருந்த மனம் எந்த கணத்தில் தனக்கு துயரம் தந்தவன் மகளை காக்க வேண்டும் என முடிவெடுத்தது? அந்த கணம் தான் மனிதன் தெய்வமாகும் மாயக் கணமா? 

ஆடை - தி.ஜானகிராமன்

எல்லா விஷமும் ஒன்றல்ல எனினும் விஷத்தின் வெவ்வேறு வடிவங்களும் ரூபங்களும் நிறைந்திருக்கிறது இவ்வுலகில். இவ்வாழ்வில். விஷபரீட்சை செய்து கொண்டேயிருக்கிறது மனித இனம் யுகம் யுகமாக. யோசித்துப் பார்த்தால் எது விஷம் எவை விஷம் என்பதை உய்த்துணர்வதையே வாழ்க்கையின் சாரமாகவும் கொண்டிருக்கிறது மானுடம். விஷங்கள் வசீகரமானவை என்பது புறக்கணிக்க இயலாத உண்மை. விரியன் குட்டி மிகச் சிறியது. அதன் நாவு அதனினும் சிறியது. அதன் நாவின் நுனியில் இருக்கும் விஷம் நுண்ணினும் நுண்ணியது. விரியன் விஷம் தீண்டப்பட்டு உடலில் நுழைந்தால் நுண்ணினும் நுண்ணிய ஊசிமுனைத்துளி தீண்டிய பெரு உடலின் முழு அளவும் வியாபிக்கிறது. மயக்கி மூச்சு திணறச் செய்து நுரை கக்க வைத்து ஜீவபலி கொண்டு ஓய்கிறது. விரியன் நா தீண்டல் பலியை சில நிமிடங்களில் நிகழ்த்தி விடுகிறது. வருடக் கணக்காக கொஞ்சம் கொஞ்சமாக அணு அணுவாக அழித்து வேடிக்கை காட்டும் விஷங்கள் பல இருக்கின்றன. துரைக்கண்ணுவை அழித்தது எந்த மெல்லக் கொல்லும் விஷம் ? அவள் வாழ்வில் என்ன ரூபத்தில் உள்நுழைந்து எவ்விதம் மீட்பின்றி அவளை அழித்தது என்னும் கேள்வியை ஒரு துயரச் சித்திரம் மூலம் முன்வைக்கும் கதை தி. ஜானகிராமனின் ‘’ஆடை’’. 

புஷ்கரணி - தி.ஜானகிராமன்

ஒரு எல்லை வரை, சடங்குகள் சாமானிய வாழ்க்கைக்கு உதவிகரமானவை. சடங்குகளைப் புரிந்து கொள்ளக் கோருகிறது -  காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தவாறு இருக்கிறது - அவற்றைத் தாண்டிச் செல்வதை அங்கீகரிக்கிறது இந்திய மரபு. பெரும் தீர்த்தம் ஒன்றின் கரையில் வாழும் கலை மனம் கொண்ட ஒருவன் அந்த தீர்த்தத்தின் சௌந்தர்யத்தை தன் சித்தத்தால் நாளும் உணர்கிறான். சாமானிய மனநிலையில் அவன் கலை மனநிலை பொருத்திக் கொள்ளவில்லை. அதை இன்னதென வகுக்காத சஞ்சலமாக அவன் உணர்கிறான். அந்த உணர்வை தன் பாணியில் அழகாய் கூறி அழகாய் சித்தரித்து அமையும் தி.ஜானகிராமன் கதைக்குள் கதை என இன்னொரு கதையை சிறுகதைக்குள் கொண்டு வந்து அவற்றை ஒன்றைப் பிரதிபலிக்கும் இரண்டு ஆடிகளாக ஆக்குகிறார். அவை ஒன்றை ஒன்று பிரதிபலித்து விரிவாகிக் கொண்டே செல்கின்றன.  

தெருப்புழுதி - க.நா.சுப்ரமணியம்

 நம் கால்கள் நிலை கொண்டிருக்கும் பூமி இருபத்து மூன்று அரை பாகை சாய்ந்து மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. அதன் மிகப் பெரும் அளவால் அது வேகமாக சுழல்வதை நாம் உணராமல் இருக்கிறோம். சுழற்சி என்பது எதிர்பாராமைகளால் ஆனது. சீரான சுழற்சி கூட. லௌகிகம் என்பதே எதிர்பாராமைகளின் ஆட்டமே. அந்த எதிர்பாராமையின் ஆடலை வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில் கண்டு திகைத்து நிற்கின்றனர் யுகம் யுகமாக மானுடர்கள். அரசறிய வீற்றிருந்த வாழ்வொன்று ஆற்றங்கரை மரமென சரிந்து நிற்பதன் கதை க.நா.சு வின் ‘’தெருப்புழுதி’’. 

எனக்குப் பிடிக்காதவை - துமிலன்

 கதை சொல்லிக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் ஆகியிருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அவனுடைய செலவுகளில் பெரும் பகுதி அவன் வீட்டிலிருந்து கிடைத்திருக்கிறது எல்லாரையும் போல. திடீரென அவனுக்குத் திருமணம் செய்து வைத்து உன் குடித்தனத்தை நீயே பார் என்று கூறிவிடுகிறார்கள். வீட்டுக்கு வெளியே இருக்கும் பரந்த உலகமும் அதன் போக்குகளும் அவன் நகர்வுகளைத் தீர்மானிக்கின்றன. இரண்டு யானைகளுக்கு நடுவே நடக்கும் சண்டையை அவற்றின் பக்கத்தில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறான் கதைசொல்லி. 15 ஆண்டுகளுக்கு முன்,ஒரு போகியாக இரண்டு வேளை சாம்பார், ரசம், கிச்சடி என உணவருந்தியவன் கதைசொல்லி. இப்போது அவன் அவற்றை தனக்குப் பிடிக்காதவை என்னும் பட்டியலில் சேர்த்து விட்டான். அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எவனடா கண்டுபிடித்தது இந்த சர்க்கரையை என அலுத்துக் கொண்டு அதனையும் தன் பட்டியலில் இணைக்கிறான். குடும்ப வாழ்க்கையில் யாருக்காவது கல்யாணம் கார்த்தி என்று வெளியூருக்குச் செல்ல வேண்டியிருப்பதால் ரயில் பிரயாணத்துக்கும் அந்த பட்டியலில் இடம் உண்டு. அடுப்பெரிக்க வாங்க வேண்டியிருப்பதால் சவுக்கு மரமும் தனக்குப் பிடிக்காதவை பட்டியலில் வைத்துக் கொள்கிறான். அரிசி காய்கறியும் அவனுக்குப் பிடிக்கவில்லை. கதைசொல்லிக்கு லௌகிக வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கிறது என்பதை பட்டியலில் அதனை சேர்க்கவில்லை என்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். 

பிரதாப முதலியார் - கரிச்சான் குஞ்சு

புவிக்கு மேலே இருக்கின்றன உம்பர் உலகங்கள். புவிக்குக் கீழும் இருக்கின்றன பலவித உலகங்கள். அதல விதல பாதாளங்கள். படைப்போன் தடைகளை புவியிலும் புவிக்கு மேலும் புவிக்குக் கீழும் அமைத்தே இருக்கிறான். ஜீவனின் தேர்வு எதுவாயினும் அது தடைகளைத் தாண்டியே ஆக வேண்டும். புவி, புவிமேல், புவிகீழ் என எல்லா உலகங்களிலும். அதல விதல பாதாளங்கள் கரியவை. ஆயினும் வலு மிக்கவை. அவை அறியப்படாமல் முழுமை முற்றுணரப்படுவதில்லை என்பதால் எப்போதும் இருப்பவை. தீயவை தீய பயத்தலால் அவற்றை தீயினும் அஞ்சி விலகுகின்றனர் சான்றோர். அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என அறிவுறுத்திய வண்ணம் உள்ளனர் அறவோர். பலி கேட்பவை சூதின் தெய்வங்கள். தன்னுள் அகழும் ஜீவனின் உயிரை மட்டுமல்ல - மானம் அறிவு பெருமை உறவு என அனைத்தையும். 

சூதாடி பிரதாப முதலியாரின் சூதாட்டக் களத்துக்கு வந்து அவர் மனைவி அவர் கட்டிய தாலியை அறுத்து அவரிடம் வீசி விட்டு செல்கிறாள். ஒரு எதிர்பாராத சவுக்கடியின் வலியை வாசகனுக்குக் கொடுக்கும் கதை.  

அற்றது பற்றெனில் - இந்திரா பார்த்தசாரதி

திருவாய்மொழி அற்றது பற்றெனில் உற்றது வீடு என்கிறது. பிறிதின் நோயை தன் நோயாகப் போற்றாதவனை எவ்விதம் அறிவுடையவன் என்று கூற முடியும் எனக் கேட்கிறார் திருவள்ளுவர்.இந்திரா பார்த்தசாரதி படைத்த நீலாம்பிகை மாமி கதாபாத்திரம் தமிழ்ச் சிறுகதையின் ஆக உச்சமான கதாபாத்திரங்களில் ஒன்று. தமிழின் ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று ‘அற்றது பற்றெனில்’
 
*****









  





 

சிறுகதை - அற்றது பற்றெனில் - இந்திரா பார்த்தசாரதி

திருவாய்மொழி அற்றது பற்றெனில் உற்றது வீடு என்கிறது. பிறிதின் நோயை தன் நோயாகப் போற்றாதவனை எவ்விதம் அறிவுடையவன் என்று கூற முடியும் எனக் கேட்கிறார் திருவள்ளுவர்.இந்திரா பார்த்தசாரதி படைத்த நீலாம்பிகை மாமி கதாபாத்திரம் தமிழ்ச் சிறுகதையின் ஆக உச்சமான கதாபாத்திரங்களில் ஒன்று. தமிழின் ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று ‘அற்றது பற்றெனில்’
 

சிறுகதை - பிரதாப முதலியார் - கரிச்சான் குஞ்சு

புவிக்கு மேலே இருக்கின்றன உம்பர் உலகங்கள். புவிக்குக் கீழும் இருக்கின்றன பலவித உலகங்கள். அதல விதல பாதாளங்கள். படைப்போன் தடைகளை புவியிலும் புவிக்கு மேலும் புவிக்குக் கீழும் அமைத்தே இருக்கிறான். ஜீவனின் தேர்வு எதுவாயினும் அது தடைகளைத் தாண்டியே ஆக வேண்டும். புவி, புவிமேல், புவிகீழ் என எல்லா உலகங்களிலும். அதல விதல பாதாளங்கள் கரியவை. ஆயினும் வலு மிக்கவை. அவை அறியப்படாமல் முழுமை முற்றுணரப்படுவதில்லை என்பதால் எப்போதும் இருப்பவை. தீயவை தீய பயத்தலால் அவற்றை தீயினும் அஞ்சி விலகுகின்றனர் சான்றோர். அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என அறிவுறுத்திய வண்ணம் உள்ளனர் அறவோர். பலி கேட்பவை சூதின் தெய்வங்கள். தன்னுள் அகழும் ஜீவனின் உயிரை மட்டுமல்ல - மானம் அறிவு பெருமை உறவு என அனைத்தையும். 

சூதாடி பிரதாப முதலியாரின் சூதாட்டக் களத்துக்கு வந்து அவர் மனைவி அவர் கட்டிய தாலியை அறுத்து அவரிடம் வீசி விட்டு செல்கிறாள். ஒரு எதிர்பாராத சவுக்கடியின் வலியை வாசகனுக்குக் கொடுக்கும் கதை.  

சிறுகதை - எனக்குப் பிடிக்காதவை - துமிலன்

 கதை சொல்லிக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் ஆகியிருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அவனுடைய செலவுகளில் பெரும் பகுதி அவன் வீட்டிலிருந்து கிடைத்திருக்கிறது எல்லாரையும் போல. திடீரென அவனுக்குத் திருமணம் செய்து வைத்து உன் குடித்தனத்தை நீயே பார் என்று கூறிவிடுகிறார்கள். வீட்டுக்கு வெளியே இருக்கும் பரந்த உலகமும் அதன் போக்குகளும் அவன் நகர்வுகளைத் தீர்மானிக்கின்றன. இரண்டு யானைகளுக்கு நடுவே நடக்கும் சண்டையை அவற்றின் பக்கத்தில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறான் கதைசொல்லி. 15 ஆண்டுகளுக்கு முன்,ஒரு போகியாக இரண்டு வேளை சாம்பார், ரசம், கிச்சடி என உணவருந்தியவன் கதைசொல்லி. இப்போது அவன் அவற்றை தனக்குப் பிடிக்காதவை என்னும் பட்டியலில் சேர்த்து விட்டான். அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எவனடா கண்டுபிடித்தது இந்த சர்க்கரையை என அலுத்துக் கொண்டு அதனையும் தன் பட்டியலில் இணைக்கிறான். குடும்ப வாழ்க்கையில் யாருக்காவது கல்யாணம் கார்த்தி என்று வெளியூருக்குச் செல்ல வேண்டியிருப்பதால் ரயில் பிரயாணத்துக்கும் அந்த பட்டியலில் இடம் உண்டு. அடுப்பெரிக்க வாங்க வேண்டியிருப்பதால் சவுக்கு மரமும் தனக்குப் பிடிக்காதவை பட்டியலில் வைத்துக் கொள்கிறான். அரிசி காய்கறியும் அவனுக்குப் பிடிக்கவில்லை. கதைசொல்லிக்கு லௌகிக வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கிறது என்பதை பட்டியலில் அதனை சேர்க்கவில்லை என்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். 

சிறுகதை - தெருப்புழுதி - க. நா. சுப்ரமணியம்

 நம் கால்கள் நிலை கொண்டிருக்கும் பூமி இருபத்து மூன்று அரை பாகை சாய்ந்து மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. அதன் மிகப் பெரும் அளவால் அது வேகமாக சுழல்வதை நாம் உணராமல் இருக்கிறோம். சுழற்சி என்பது எதிர்பாராமைகளால் ஆனது. சீரான சுழற்சி கூட. லௌகிகம் என்பதே எதிர்பாராமைகளின் ஆட்டமே. அந்த எதிர்பாராமையின் ஆடலை வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில் கண்டு திகைத்து நிற்கின்றனர் யுகம் யுகமாக மானுடர்கள். அரசறிய வீற்றிருந்த வாழ்வொன்று ஆற்றங்கரை மரமென சரிந்து நிற்பதன் கதை க.நா.சு வின் ‘’தெருப்புழுதி’’. 

சிறுகதை - புஷ்கரணி - தி. ஜானகிராமன்

ஒரு எல்லை வரை, சடங்குகள் சாமானிய வாழ்க்கைக்கு உதவிகரமானவை. சடங்குகளைப் புரிந்து கொள்ளக் கோருகிறது -  காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தவாறு இருக்கிறது - அவற்றைத் தாண்டிச் செல்வதை அங்கீகரிக்கிறது இந்திய மரபு. பெரும் தீர்த்தம் ஒன்றின் கரையில் வாழும் கலை மனம் கொண்ட ஒருவன் அந்த தீர்த்தத்தின் சௌந்தர்யத்தை தன் சித்தத்தால் நாளும் உணர்கிறான். சாமானிய மனநிலையில் அவன் கலை மனநிலை பொருத்திக் கொள்ளவில்லை. அதை இன்னதென வகுக்காத சஞ்சலமாக அவன் உணர்கிறான். அந்த உணர்வை தன் பாணியில் அழகாய் கூறி அழகாய் சித்தரித்து அமையும் தி.ஜானகிராமன் கதைக்குள் கதை என இன்னொரு கதையை சிறுகதைக்குள் கொண்டு வந்து அவற்றை ஒன்றைப் பிரதிபலிக்கும் இரண்டு ஆடிகளாக ஆக்குகிறார். அவை ஒன்றை ஒன்று பிரதிபலித்து விரிவாகிக் கொண்டே செல்கின்றன.  

சிறுகதை - ஆடை - தி.ஜானகிராமன்

எல்லா விஷமும் ஒன்றல்ல எனினும் விஷத்தின் வெவ்வேறு வடிவங்களும் ரூபங்களும் நிறைந்திருக்கிறது இவ்வுலகில். இவ்வாழ்வில். விஷபரீட்சை செய்து கொண்டேயிருக்கிறது மனித இனம் யுகம் யுகமாக. யோசித்துப் பார்த்தால் எது விஷம் எவை விஷம் என்பதை உய்த்துணர்வதையே வாழ்க்கையின் சாரமாகவும் கொண்டிருக்கிறது மானுடம். விஷங்கள் வசீகரமானவை என்பது புறக்கணிக்க இயலாத உண்மை. விரியன் குட்டி மிகச் சிறியது. அதன் நாவு அதனினும் சிறியது. அதன் நாவின் நுனியில் இருக்கும் விஷம் நுண்ணினும் நுண்ணியது. விரியன் விஷம் தீண்டப்பட்டு உடலில் நுழைந்தால் நுண்ணினும் நுண்ணிய ஊசிமுனைத்துளி தீண்டிய பெரு உடலின் முழு அளவும் வியாபிக்கிறது. மயக்கி மூச்சு திணறச் செய்து நுரை கக்க வைத்து ஜீவபலி கொண்டு ஓய்கிறது. விரியன் நா தீண்டல் பலியை சில நிமிடங்களில் நிகழ்த்தி விடுகிறது. வருடக் கணக்காக கொஞ்சம் கொஞ்சமாக அணு அணுவாக அழித்து வேடிக்கை காட்டும் விஷங்கள் பல இருக்கின்றன. துரைக்கண்ணுவை அழித்தது எந்த மெல்லக் கொல்லும் விஷம் ? அவள் வாழ்வில் என்ன ரூபத்தில் உள்நுழைந்து எவ்விதம் மீட்பின்றி அவளை அழித்தது என்னும் கேள்வியை ஒரு துயரச் சித்திரம் மூலம் முன்வைக்கும் கதை தி. ஜானகிராமனின் ‘’ஆடை’’.   

Saturday, 28 December 2024

சிறுகதை - மனித தெய்வம் - துரோணன்

தங்கை கொலை செய்யப்படுகிறாள். தங்கையைக் காக்க இயலாமல் போனோமே எனக் கதறும் அண்ணன் மீதே கொலைப்பழி சுமத்தி பல ஆண்டுகள் சிறைக்கு அனுப்பி வைக்கிறான் கொலையாளி. சிறைவாசம் முடிந்து ஊர் திரும்புகிறான் அண்ணன். சிறையிலிருந்த ஒவ்வொரு கணமும் கொலை என்ற எண்ணத்தை மட்டுமே அடை காத்திருக்கிறான். கொலையாளி வீட்டுக்கு வரும் போது அந்த வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கொலையாளியின் மகள் தீயில் சிக்கியிருக்கிறாள். உள் நுழைய யாருக்கும் துணிவில்லை. சிறையிலிருந்து வெளிவந்த கைதி தீக்குள் நுழைந்து தன் உயிரைத் தந்து அவள் உயிரைக் காக்கிறான். கொலை எண்ணத்தையே எண்ணிக் கொண்டிருந்த மனம் எந்த கணத்தில் தனக்கு துயரம் தந்தவன் மகளை காக்க வேண்டும் என முடிவெடுத்தது? அந்த கணம் தான் மனிதன் தெய்வமாகும் மாயக் கணமா?