பிரபு மயிலாடுதுறை
Friday 19 April 2024
ஓட்டு
Wednesday 17 April 2024
ராமனும் கம்பனும்
Sunday 14 April 2024
புத்தாண்டு தினத்தில்
இன்று காலை அமெரிக்காவிலிருந்து நண்பர் அழைத்திருந்தார். நமது தளத்தின் பதிவுகளை வாசிப்பது தினமும் உரையாடலில் இருக்கும் உணர்வைத் தரக்கூடியது ; கடந்த சில நாட்களாக புதிய பதிவு இல்லாததால் ஃபோனில் அழைத்தேன் என்று கூறினார். இந்த பிரியங்கள் தான் என்னை எழுத வைக்கின்றன. புதிய ஆண்டில் நண்பருடன் உரையாடியது உற்சாகமான துவக்கமாக அமைந்தது.
தொழில் நிமித்தமாக வடலூர் அருகே உள்ள நண்பரை சந்திக்கச் சென்றேன். மயிலாடுதுறை - சிதம்பரம் சாலை என்பது நம்ப முடியாத அளவுக்கு மாற்றம் கண்டுள்ளது. மிக பிரும்மாண்டமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வளைவுகள் அனைத்தும் நேராக்கப் பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றில் ஒரு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுக்கு ஜி.எஸ்.டி மூலம் கிடைத்த வருவாயே இந்த மாற்றத்துக்குக் காரணம். ஜி.எஸ்.டி அமலாக்கத்தில் உறுதி காட்டிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பாராட்டுக்குரியது.
வடலூர் செல்லும் வழியில் புவனகிரியில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆலயத்துக்குச் சென்று சுவாமியை வழிபட்டேன். வருடத்தின் முதல் நாளில் சுவாமி சன்னிதானத்தில் இருந்தது மனதுக்கு அமைதியாக உணர வைத்தது.
நண்பரை அவருடைய வீட்டில் சந்தித்தேன். ஒரு மணி நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். நண்பர் மிக இனிய மனிதர்.
வடலூர் அருகே இருக்கும் சித்தப்பா வீட்டுக்குச் சென்றிருந்தேன். சித்தப்பா வீடு மிக அமைதியானது. வீட்டைச் சுற்றி பலவிதமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இரண்டு நாட்கள் இங்கே வந்து முழுமையாக தங்கியிருக்க வேண்டும் என எண்ணினேன். சித்தப்பா வீட்டுக்கு அருகே ஒரு குளம் உள்ளது. அந்த குளக்கரையில் நடுவதற்கு 6 ஆல மரக் கன்றும் 6 அரச மரக் கன்றும் வாங்கிக் கொண்டு அடுத்த வாரம் வருவதாக் கூறி விடை பெற்றுக் கொண்டேன். சுவையான மதிய உணவை சித்தி அளித்திருந்தார்கள்.
புதிய ஆண்டின் முதல் தினம் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருந்தது.
இரவு 7 மணி அளவில் வீடு திரும்பினேன்.
Monday 1 April 2024
வசந்த காலம்
உக்கிரமான கோடை தனக்குள் வசந்த காலத்தை உட்பொதிந்திருப்பது ஓர் இனிய அற்புதம். கோடையில் சூரிய அஸ்தமனத்துக்கு முந்தைய இரண்டு மணி நேரம் என்பது இனிமையானது. இந்த காலத்தில் தான் மரங்கள் புதிய இலைகளைத் துளிர்க்கின்றன. மரங்களில் மலர்கள் மலர்கின்றன.
இன்று வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு புரச மரம் ( பலாசம்) மலரத் தொடங்கியிருப்பதைக் கண்டேன்.
Sunday 31 March 2024
நிதி ஆண்டு
Friday 29 March 2024
தாடி ( நகைச்சுவைக் கட்டுரை)
Thursday 21 March 2024
நந்தி மலர்
வீட்டுக்கு அருகே ஒரு நந்தியாவட்டை மலர்ச்செடி உள்ளது. பல மாதங்களுக்கு முன்னால் என்னால் நடப்பட்டது. ஒரு கோடையையும் ஒரு மழைக்காலத்தையும் கடந்து இப்போது அடுத்த சுற்றுக்குத் தயாராகி உள்ளது. கோடையின் வெப்பம் பெரு உக்கிரம் கொள்ளத் துவங்கியிருக்கும் பருவம். தார்ச்சாலைக்கும் மதில் சுவருக்கும் இடையில் அமைந்திருக்கிறது அச்செடி. எப்போதும் சாலையில் செல்லும் வாகனங்களால் செடியின் தழைகள் முழுவதிலும் புழுதி படிந்திருந்தது. அதனைக் கடந்து செல்லும் போது சிலமுறை அச்செடியைப் பார்த்தேன். கோடை, புழுதி வறட்சி என அத்தனை தடைகள் இருப்பினும் அதில் பல மலர்கள் மலர்ந்திருந்தன. அன்றலர்ந்த மலர்கள் என்ற கம்பன் நினைவில் எழுந்தான். மலர்ச்சி என்பது ஒரு சுபாவம். சூழல் வசதியோ அசௌகர்யமோ மலர்களுக்கு அதில் எந்த சொல்லும் இல்லை. எந்த புகாரும் இல்லை. அவை மலர்ந்திருக்கின்றன. யோகம் மலர்தல் என ஏன் கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
நந்தி மலர்ச்செடிக்கு ஒரு வாளியில் நீர் கொண்டு சென்று அதன் மீது மழை போலத் தூவினேன்.
Tuesday 19 March 2024
எனது படைப்புகள்
காவிரியிலிருந்து கங்கை வரை - பகுதி 1
அதன் இரண்டாம் பகுதியின் இணைப்பு
ஹம்பி - நிலவைக் காட்டும் விரல்
சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்
சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு
யானை பிழைத்தவேல் - பகுதி 1 யானை பிழைத்தவேல் - பகுதி 2
யானை பிழைத்தவேல் - பகுதி 3 யானை பிழைத்தவேல் - பகுதி 4
யானை பிழைத்தவேல் - பகுதி 5
ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரைகள் & கடிதங்கள்
சுப்பு ரெட்டியார்
படைப்பாளியைப் படைக்கலனுடன் சந்திப்பவர்களுக்கு
அஞ்சலி : செழியன்
சித்தாந்தத்தால் மனம் நிரம்பியிருக்கும் நண்பனுக்கு
ஜனனி
காத்தல்
சொல்வனம் இதழில் வெளியான எனது கட்டுரைகளின் இணைப்பு :
யாமறிந்த புலவரிலே
புனைதலும் கலைதலும்
இறுதி அஞ்சலி : ஆ ப ஜெ அப்துல் கலாம்
***