பிரபு மயிலாடுதுறை
Sunday, 20 September 2026
மாநிலத் தலைமை தணிக்கை அலுவலகத்துக்கு ஒரு புகார்
தணிக்கை
வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு,
***** கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச்சட்டம் படி கோரப்பட்டிருந்த விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமத்தில் உள்ள மொத்த தெருவிளக்குகள் 337. ஏப்ரல் 1 லிருந்து ஜூலை 31 வரையான 120 நாளில் பழுதான தெருவிளக்குகள் 127 என தகவல் தரப்பட்டுள்ளது. முதற்பார்வைக்கு இந்த தகவல் உண்மையிலிருந்து மிகத் தொலைவானது என்பதை எவருக்கும் தெளிவாகத் தெரியும். இந்த விஷயத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஊராட்சிகளின் தணிக்கை அதிகாரி என்ற முறையில் இந்த விஷயத்தை தணிக்கை அல்லது மறுதணிக்கை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
பிரபு
ஆர் டி ஐ - பதில்
நேற்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து ***** ஊரின் தெருவிளக்கு பழுது பார்த்தல் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் படி கோரியிருந்த விபரங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
***** கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் எண்ணிக்கை = 337
***** கிராமத்தில் 01.04.2026லிருந்து 31.07.2026 வரையிலான
120 நாட்களில் பழுதான தெருவிளக்குகள் எண்ணிக்கை = 127
***
வருவாய் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து இந்த விவகாரத்தை மறுதணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோர இருக்கிறேன்.
***
01.12.2025லிருந்து 31.03.2026 வரை அந்த ஊராட்சியில் தெருவிளக்கு பழுது பார்க்க எவ்வளவு தொகை செலவாகியிருக்கிறது என்ற விபரத்தையும் தகவல் பெறும் உரிமைச்சட்டம் படி கேட்க இருக்கிறேன்.
Tuesday, 15 September 2026
காவியகர்த்தா (மறுபிரசுரம்)
Friday, 11 September 2026
இன்னும் சற்று தூரம் (மறுபிரசுரம்)
நாம் சென்று சேர வேண்டிய இடம் வந்து விடும்
பாட்டி வீடு
மாமா வீடு
சித்தி வீடு
அருண் இருப்பான்
செல்வி இருப்பாள்
லீவுக்கு ஊருக்கு வந்த பசங்க இருப்பாங்க
தீமிதி
திருவிழா
பலூன் வாங்கித் தரேன்
பஞ்சு மிட்டாய் வாங்கித் தரேன்
இன்னும் கொஞ்ச நாள்ல
நம்ம கஷ்டம்லாம் சரியாயிடும்
நம்பிக்கையின்மையிலிருந்து
நம்பிக்கைக்கு
அம்மாக்கள்
நடந்து கொண்டேயிருக்கிறார்கள்
Thursday, 10 September 2026
உயிரும் உறவும்
நேற்று இரவு எனது நெருங்கிய உறவினர் ஒருவர் மூர்ச்சையானார். எனக்குத் தகவல் தெரிந்து உடன் அங்கு சென்றேன். ஒரு ஆம்புலன்ஸ் வரச் சொல்லி முதலுதவிக்கு ஒரு மருத்துவமனைக்குச் சென்று விட வேண்டும் என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து மருத்துவமனைக்கு மூர்ச்சையானவரை அழைத்துச் சென்றேன். மூர்ச்சையாயிருந்தவர் உடலின் சில பகுதிகளைக் காணும் போது அவர் மூளை நரம்புமண்டலம் தொடர்பான பாதிப்புக்கு ஆளாகியிருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றியது ; அதனால்தான் அவரை எக்காரணம் கொண்டு நடத்தி அழைத்துச் செல்லக் கூடாது என முடிவு செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்து ஆம்புலன்ஸில் இருந்த நகரும் படுக்கையில் அவரை அவர் படுக்கையில் படுத்திருந்த வண்ணமே மாற்றி ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் முதல் எண்ணமாக மூளை நரம்புமண்டல பாதிப்பு எனக் கணித்து மூளையில் இரத்தக்கட்டு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதினார். ஆரம்பகட்ட முதல் உதவி சிகிச்சைகள் தரப்பட்டன. அங்கிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள ஊரின் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தலைப்பகுதியை சி டி ஸ்கேன் செய்து பார்த்தனர். மூளையில் இரத்தக்கட்டு இருப்பதை அறிந்தனர். சில மணி நேரங்களில் தலைப்பகுதியில் ஒரு மண்டையோட்டைத் துளைத்து ஓர் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு சில மணி நேரங்களுக்குப் பின் உறவினர் உடலில் அசைவுகள் தென்படலாயின. அவர் உடலை அசைக்கத் தொடங்கினார். அவர் விழிகளைத் திறக்க முயன்றார். சுற்றி இருப்பவர் பேசுவதை அவர் புரிந்து கொள்கிறார் என்பதையும் அவர் முகம் அவர் மனம் அதை உள்வாங்கிக் கொள்வதையும் காட்டுகிறது. அறுவைசிகிச்சைக்குப் பின் மீண்டும் ஒரு ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்கேன் அறிக்கை அடிப்படையில் இன்னொரு அறுவைசிகிச்சை தேவைப்படுமா அல்லது மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்தால் போதுமா என்பது முடிவு செய்யப்படும்.
Thursday, 3 September 2026
தெருவிளக்கு - முதல் மேல்முறையீடு
Tuesday, 1 September 2026
வருவாய் கோட்டாட்சியர் பதில்
இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு கடிதமும் ஒரு ஆர் டி ஐ பதிலும் வந்திருந்தன. கடிதம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டு அதன் நகல் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. ***** ஊரின் கிராம சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 01.04.2026 - 31.07.2026 வரையிலான வரவு செலவு விபரங்களில் தெருவிளக்கு பழுது பார்த்தல் என்னும் வகையில் ரூ.33,000 செலவு செய்ததாக கூறியிருந்தார்கள். அவ்வாறெனில் ஆண்டுக்கு அந்த ஊராட்சி தெருவிளக்கு பராமரிப்புக்கு ரூ. 1,00,000 செலவழிக்கிறது என்று பொருள். இந்த செலவை மறுதணிக்கை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தேன். வருவாய் கோட்டாட்சியர் அதனை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பியிருக்கிறார். மேற்படி செலவின் ரசீதுகளை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரியிருந்தேன். அந்த கோரிக்கையையும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பியிருந்தார்.
தெருவிளக்கும் தமிழக அரசியலும் (மறுபிரசுரம்)
தமிழக அரசியலுக்கும் தெருவிளக்குகளுக்கும் மிக நெருங்கிய பொருத்தம் இருக்கிறது. தமிழக கிராமங்களில் குழல் விளக்குகள் எனப்படும் டியூப் லைட்டுகள் தெருவிளக்குகளாக இருந்தன. அதற்கு முன் குண்டு பல்புகள் தெருவிளக்குகளாக இருந்தன. இரவு நேரத்தில் மக்கள் நடமாட தெருக்களில் தெருவிளக்குகள் ஒளிர்வது அவசியம் என்பதால் தெருவிளக்கு ஓர் அத்தியாவசியத் தேவை. ஊராட்சிகள் தெருவிளக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்.
தமிழகத்தில் 2006ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் படி 93 இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவோடு ஒரு மைனாரிட்டி அரசை அமைத்து நடத்தியது. மேற்படி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தந்ததால் அந்த மைனாரிட்டி அரசு 2006 - 2011 வரை நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் மைனாரிட்டி திமுக அரசு இந்தோனேஷியாவிலிருந்து தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்து அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தியதால் மின்சார உற்பத்தி குறைந்தது. தமிழகம் மிக அதிக மின்வெட்டைச் சந்தித்தது. ஒரு நாளைக்கு காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் என 4 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் ஆனது. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ’’ஆற்காடு’’ வீராசாமி.
அந்தக் காலகட்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது. தமிழக மின்சார அமைச்சர் ‘’ஆற்காடு’’ வீராசாமி தமிழகத்தின் எல்லா ஊராட்சிகளிலும் உள்ள தெருவிளக்குகளை சோடிய ஆவி விளக்குகளாகவும் பாதரச ஆவி விளக்குகளாகவும் மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் தந்தார். சாதாரண குழல் விளக்கு அமைக்க ரூ.200 செலவாகிறது என்றால் சோடிய ஆவி விளக்குகளும் பாதரச ஆவி விளக்குகளும் அமைக்க குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும். தமிழகத்தில் 12,500 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 200 விளக்குகள் அமைத்தால் கூட 25,00,000 விளக்குகள் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும் என்றால் அரசியல்வாதிகள் அதற்கு ரூ.8000 செலவாகும் என கணக்கு எழுதுவார்கள் . ஒரு விளக்குக்கு ரூ.3000 ஊழல் எனில் 25,00,000 விளக்குகளுக்கு ரூ.750 கோடி ஊழல் செய்து வெளியே எடுத்தார்கள். இது குறைந்தபட்ச கணக்கீடு. நிகழ்ந்தது இன்னும் பல மடங்கு இருக்கும்.
இதில் இன்னொரு எதிர்பாராத விஷயம் நடந்தது. குழல் விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாட்டை விட சோடிய ஆவி விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாடு மிக அதிகம். பல மடங்கு யூனிட் மின்சாரம் அதற்கு தேவைப்பட்டது. தரமற்ற நிலக்கரியால் மின் உற்பத்தி குறைந்த நிலையில் சோடிய பாதரச ஆவி விளக்குகளும் கூடுதல் மின்சாரம் எடுத்துக் கொண்டன. இவை அத்தனையும் தினம் 4 மணி நேர மின்வெட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தன. பல ஊராட்சிகள் இந்த சோடிய பாதரச ஆவி விளக்குகளால் மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணம் செலுத்த இயலாமல் ஆனது. கோடிக்கணக்கான ரூபாய் மின்வாரியத்துக்கு ஊராட்சிகளின் நிலுவைத்தொகை ஆனது.
2014ம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வையும் குறிப்பிடுகிறேன்.