Sunday, 31 July 2022
நகரப் பேருந்து
கவனம்
Sunday, 24 July 2022
அதிகாலையின் வெள்ளிமீன்
ஒரு புலரியின் முன்
பனித்துளிகளை ஏந்தி முன் நகரும்
இளநதியின் முன்
பட்சிகள்
குதூகலித்து ஒலியெழுப்பி பறந்து ஆடும்
ஒரு விருட்சத்தின் முன்
ஒரு சின்னஞ்சிறு தீச்சுடரின் முன்
நிற்பதைப் போல
உன் முன் நிற்கிறேன்
உன் கருணை
என்னைத் தழுவட்டும்
உன் பிரியங்கள்
என்னைச் சூழ்ந்து கொள்ளட்டும்
உன் அன்பு
என்னில் முழுதாக நிறையட்டும்
***
சமகாலத் தமிழ் நாவல் பரப்பில் அதிகாலையின் வெள்ளிமீன் எனத்
தயக்கமின்றி சொல்லக் கூடிய நாவல் அஜிதனின் ‘’மைத்ரி’’. அமைப்பிலும் உள்ளடக்கத்திலும்
தரிசனத்திலும் முற்றிலும் ஒரு குறுங்காவியம் எனச் சொல்லத்தக்க நாவல். இந்த நாவலை வாசித்த
போது ஒவ்வொரு விதத்தில் எனக்கு இந்தியாவின் பெரும் நாவலாசிரியர்களான தாரா சங்கரும்,
விபூதி பூஷணும் கிரிராஜ் கிஷோரும் நினைவில் எழுந்து கொண்டே இருந்தார்கள். நாவலை வாசித்து
முடித்ததும் அது ஏன் என்பதை புறவயமாக வகுத்துக் கொள்ள முயன்றேன். மூவருமே இலக்கிய ஆசான்கள்.
மூவருமே தங்கள் செவ்வியல் படைப்புகள் மூலம் இலக்கியத்தில் நிலை பெற்றவர்கள். மைத்ரியின்
ஆசிரியர் தனது முதல் நாவலை எழுதியிருக்கிறார். அவ்வாறெனில் அவர்களின் பொது அம்சம் என்ன?
வேறுவிதமாக யோசித்துப் பார்க்கலாம். ஆசான்கள் மூவரும் சமவெளியை எழுதியவர்கள். அஜிதன்
மலை உருகி நதியாகும் தோற்றுமுகத்தை எழுதியவர். தோற்றுமுகத்துக்கும் சமவெளிக்கும் தொடர்பாயிருப்பது
நதி. அஜிதனுக்கும் ஆசான்களுக்கும் பொதுவாயிருப்பது கூட அந்த நதியின் பிரவாகம் தான்
என எண்ணிக் கொண்டேன்.
ஹரன் தீயெனப் பற்றியெழும் ரஜோ குணத்தைக் குறிப்பவன். தன்னுள்
வரும் எதனையும் அந்த தீயால் அணுகுபவன். நீறு பூத்த நெருப்பாக அதனை அகத்தில் பேணுபவன்.
அவ்வாறு பேணுதலை தனது தனி இயல்பாக புரிந்து கொண்டிருப்பவன். இயற்கையின் அறிய முடியாத
விதிகளில் ஏதோ ஒன்றால் அவன் உணரும் நிறைவின்மை அவனை அவனுடைய நிலையிலிருந்து வேறெங்கோ
நகர்த்துகிறது. அந்த நகர்வு அவனுக்கு நடந்தது இயற்கை அவன் மீது கொண்ட பிரியத்தால்.
உலகத்தை உலகியலை மூன்று குணங்களாகப் புரிந்து கொள்கிறான் ஹரன்.
ஜீவிதம் இந்த மூன்று குணங்களின் மோதலின் விளைவாக நிகழ்ந்து கொண்டிருக்கையில் இவற்றுக்கு
அப்பால் – மிக அப்பால் – இருக்கும் தூயவெளியின் மென்மையான கரம் ஹரனைப் பற்றுகிறது.
கட்வாலி பிராந்தியத்தின் நிலக்காட்சிகளும் அந்த பிராந்தியத்தின் தொல்கதைகளும் நாவலில்
குறிப்புணர்த்துவது அதனையே. தேவதாரு மரங்கள் மேகங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் உலகம்
ஒன்று. தேவதாரு மரங்கள் வேரூன்றியிருக்கும் நிலம் இரண்டாவது. அதற்குக் கீழ் இருக்கும்
பாதாளங்களின் உலகம் மூன்றாவது.
பேரன்பாய் பெருங்கருணையாய் தனது இருப்பைக் கொண்டிருக்கிறாள்
மைத்ரி. ஒரு மரத்துண்டை பாகீரதி தன்னுடன் அழைத்துச் செல்வதைப் போல – ஒரு கூழாங்கல்லுக்கு
பாகீரதி தனது குளிர்ச்சியை அளிப்பது போல மைத்ரி ஹரன் உறவு அமைகிறது.
நிலக்காட்சிகளின் வர்ணனையும் கட்வாலி பிராந்தியத்தின் உணவு,
உடை , உறையுள் ஆகியவற்றை துல்லியமாக விவரிப்பதும் அந்த நிலத்தின் – மக்களின் பண்பாட்டு
வெளியை நாவலில் முழுமையாகக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
சமூகப் பொருளியல் நிலை சார்ந்த – தனி மனித அகங்காரம் சார்ந்த
வலிகள் மட்டுமே மிக அதிகமாகப் பேசப்பட்டிருக்கும் தமிழ்ச் சூழலில் ‘’மைத்ரி’’ நாவலில்
பேசப்படும் ‘’வலி’’ தமிழ் நாவல் பரப்பில் ஒரு முக்கியமான அடியெடுப்பைக் குறிக்கிறது.
ஹரன் முழுகி எழும் வென்னீர் ஊற்றும் இரு குழந்தைகள் மூழ்கி
எழும் குளிர் நிறைந்த நதிப் பிரவாகமும் இந்த நாவலின் தரிசனத்தை குறிப்புணர்த்தி விடுகின்றன.
***
Thursday, 21 July 2022
பக்கம்
Wednesday, 20 July 2022
மரம் - சட்டம் - விதிகள்
’’பொது இடம்’’ என்பது தெருக்கள், நீர்நிலைகளின் கரைகள், ஊருக்குப் பொதுவாக இருக்கும் மைதானங்கள், சாலைகள், அரசுக் கட்டிடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். இந்தகைய இடங்களில் தானாக வளரும் அல்லது மக்களால் அல்லது அரசால் வளர்க்கப்படும் மரங்கள் அரசாங்கத்தின் சொத்துக்கள் ஆகும்.
அவை வெட்டப்பட வேண்டும் என்றால் அதற்காக பல விதிமுறைகள் உள்ளன.
1. மரம் வெட்டப்பட வேண்டும் என்றால் எழுத்துப்பூர்வமாக இன்ன காரணத்துக்காக மரம் வெட்டப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அல்லது சார் ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
2. அந்த மனுவை ஆய்வு செய்து சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்ட அதிகாரி முதலில் அந்த இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்வார்.
3. அந்த மரம் அகற்றப்பட்டே தீர வேண்டும் எனில் அந்த மரத்தின் பொருள் மதிப்பை அரசாங்கத்துக்கு செலுத்தி மீண்டும் விண்ணப்பிக்குமாறு கூறுவார். அந்த மதிப்பு சந்தை விலையை விட அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.
4. சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்ட அதிகாரி நேரில் ஆய்வு செய்ததோ அல்லது மரத்தின் மதிப்பை அரசாங்கத்துக்கு செலுத்தச் சொன்னதோ விண்ணப்பித்தவருக்கு அந்த மரத்தை வெட்ட முகாந்திரம் அளித்ததாக ஆகாது.
5. மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி அல்லது சார் ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் இன்ன இடத்தில் உள்ள இன்ன மரம் இன்ன காரணத்துக்காக வெட்டப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என உத்தரவு இட வேண்டும். அந்த உத்தரவின் அடிப்படையில் மரத்தை வெட்டிக் கொள்ளலாம். விண்ணப்பிப்பவர் பொதுஜனமாக இல்லாமல் அரசை சேர்ந்த ஒரு அலுவலர் எனில் வெட்டப்பட்ட அந்த மரம் ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் மரத்தின் தொகை சேர்க்கப்பட வேண்டும்.
இத்தனை விதிமுறைகள் ஏன் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை சாமானியர் கூட எளிதில் புரிந்து கொள்ளலாம். இத்தனை விதிமுறைகளும் உயிர் மரங்கள் காக்கப் பட வேண்டும் என்பதற்காகவே.
மரங்களை முழுமையாக வெட்ட மட்டும் அல்ல அதன் கிளைகளை வெட்டக்கூட இந்த விதிமுறைகள் பொருந்தும். அதாவது அதன் அர்த்தம் என்ன எனில் பொது இடத்தில் இருக்கும் மரங்களுக்கு மனிதர்களால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே.
இந்திய அரசியல் சாசனம் ,’’இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் உயிர்கள் மேல் கருணையோடிருத்தல்’’ என்பதை தனது குடிகளின் அடிப்படை கடமையாக அறிவிக்கிறது. அந்த அடிப்படையிலேயே ‘’காவிரி போற்றுதும்’’ பொது இடத்தில் உள்ள மரங்கள் தனிநபர்களால் வெட்டப்படும் போது அந்த செயலை சட்டத்தின் முன் கொண்டு வருகிறது.
Tuesday, 19 July 2022
வியூகமும் யுக்தியும்
Friday, 15 July 2022
தபால் வங்கிகள்
Wednesday, 13 July 2022
ஆசிரியர்
இந்தியாவின் பாரம்பர்யமான கல்வி மிக இளம் வயதிலேயே துவங்குகிறது. மொழியும் கணிதமும் மனனம் செய்தல் என்ற முறையிலேயே மாணவனின் அகத்தில் நிறையும் வண்ணம் அந்த முறைமை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இளம் குழந்தையின் அகம் விருப்பு வெறுப்புகள் இல்லாதது. பயிற்சிக்கு திறந்த மனத்துடன் இருப்பது. செம்மை செய்யப்பட்ட நிலத்தில் விதையிடுதலைப் போல குழந்தையின் அகத்திற்கு கல்வி அளிக்கப்பட்டிருக்கிறது.
விவசாயக் கல்வியும் தொழிற்கல்வியும் கூட அவ்விதமே மாணவர்களுக்கு கிடைத்திருக்கிறது. தந்தையும் பாட்டனாரும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களும் ஆசிரியர்களாக இருந்து கல்வி அளித்திருக்கின்றனர். அந்த மரபு இப்போதும் தொடர்கிறது. தந்தையை தனது ஆசானாகவும் கொள்ளும் பேறு இப்போதும் பலருக்குக் கிடைக்கிறது.
’’உபநிஷத்’’ என்ற சொல்லுக்கு ஆசிரியரின் அருகிருத்தல் என்று பொருள். இந்திய மரபில் ஆசிரியர் மாணவனை தன் உடனிருக்க அனுமதிக்கிறார். அவ்வாறு ஆசிரியர் ஒருவர் தன்னை அனுமதித்தலையே மாணவன் குருவருள் எனக் கொண்டு பெருமதிப்பு கொள்கிறான். மாணவனின் அகநிலை வளர்ச்சிக்குக் குருவின் அருள் காரணமாக அமைவதால் ஆசிரியனை இறைவடிவமாகக் கொள்கிறது இந்திய மரபு.
ஆலமர்க் கடவுளான தென்திசை முதல்வன் உலக உயிர்களின் அறியாமையைப் போற்றும் ஆசானாக விளங்குகிறான். அடித்தட்டு மக்களின் தலைவனான இளைய யாதவன் அர்ஜூனனின் ஆசிரியனாக அமைந்து கீதையை உரைத்தான். தன் அகக் கருணையின் வெள்ளத்தால் உலகம் முழுமையும் அணைத்துக் கொண்ட பகவான் புத்தரும் மக்கள் துயர் தீர மக்களிடம் ஒரு ஆசிரியனாக இருந்து பேசியவரே.
மேலான மானுட வாழ்வை நோக்கி மானுடர்களை இட்டுச் சென்ற - இட்டுச் செல்லும் அனைவரும் ஆசிரியர்களே. அந்த ஆசிரியர்கள் மானுடத்தால் என்றும் வணங்கப்படுவார்கள்.
Sunday, 10 July 2022
சி.பி.கி.ரா.ம்.ஸ்
Saturday, 9 July 2022
நோக்க நோக்க
Thursday, 7 July 2022
வாய்ப்பு ( நகைச்சுவைக் கட்டுரை)
Wednesday, 6 July 2022
காணும் பொருளாய் காண்பதெல்லாம் காட்டுவதாய்
Sunday, 3 July 2022
சந்திப்பு
வியாபகம்
Saturday, 2 July 2022
இடம் பொருள் மரம்
இன்று காலை அலைபேசியில் ஒரு அழைப்பு. எண்ணைப் பார்த்தால் வெளிநாட்டு அழைப்பு என்று தோன்றியது. வெளிநாடுகளிலிருந்து வாசகர்கள் கணிசமாக இப்போது அழைக்கிறார்கள். யாராக இருக்கும் என்று யோசித்தவாறு ஃபோனை எடுத்தேன். எனது வாசகரும் வகுப்புத் தோழருமான நண்பர் அழைத்திருந்தார். இந்தியாவில் சில ஆண்டுகள் பணியாற்றி விட்டு பின்னர் பல ஆண்டுகள் ஜப்பானில் பணி புரிந்தார். ஜப்பான் அவருக்கு மிகவும் பிடித்த நாடு. இருப்பினும் அங்கிருந்து அமெரிக்கா செல்ல நேர்ந்தது. அமெரிக்காவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிகிறார். பால்ய சினேகிதர்கள் என்றாலும் காலம் எங்கள் இருவரையுமே மாற்றி அமைத்திருக்கிறது. அனுபவம் எங்கள் இருவரையும் ஒரு குறிப்பிட்ட பக்குவத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. அவரது அழைப்பு பெரும் மகிழ்ச்சி தந்தது.
நண்பன் தான் முதலில் ஆரம்பித்தான். நலம் விசாரித்த பின் நண்பன் ‘’என்ன செஞ்சுகிட்டு இருக்க?’’ என்றான். நான் செய்து கொண்டிருக்கும் ஏகப்பட்ட வேலைகள் முண்டியடித்துக் கொண்டு என் மனதில் வந்து நின்றன. எதை முதலில் சொல்வது என்று யோசித்தேன். ‘’ நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கன்னு நான் சொல்லட்டுமா? ஒவ்வொரு நாளும் உன்னோட பிளாக்-ஐ வாசிக்கறேன்’’ என்றான். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
‘’பிரபு! நான் ஒரு விஷயம் முடிவு செஞ்சிருக்கன். அதை நீதான் முன்னால இருந்து செஞ்சு கொடுக்கணும். ‘’
’’ 3 ஏக்கர் விவசாய நிலம் வேணும். நல்ல இடமா பாரு. கிரயம் பண்ணிடுவோம். அதுல 1000 தேக்கு மரம் வளர்க்கணும். ஏற்பாடு செஞ்சுட்டு சொல்லு. பணத்தை ஒரே பேமெண்ட்டா அனுப்பி வச்சுடறன்.’’
எனது மனம் நெகிழ்ந்து விட்டது. எத்தனையோ கண்டங்கள் கடல்கள் தாண்டி அவன் இருக்கிறான். ‘’காவிரி போற்றுதும்’’ சாதித்தது என்ன என்ற கேள்வி எனக்கு அவ்வப்போது எழும். நாம் நிச்சயமாக ஏதோ ஒன்றை சாதிக்கிறோம் என்ற தெம்பை இந்த அழைப்பு கொடுத்தது.