Sunday, 31 March 2024
நிதி ஆண்டு
Friday, 29 March 2024
தாடி ( நகைச்சுவைக் கட்டுரை)
Thursday, 21 March 2024
நந்தி மலர்
வீட்டுக்கு அருகே ஒரு நந்தியாவட்டை மலர்ச்செடி உள்ளது. பல மாதங்களுக்கு முன்னால் என்னால் நடப்பட்டது. ஒரு கோடையையும் ஒரு மழைக்காலத்தையும் கடந்து இப்போது அடுத்த சுற்றுக்குத் தயாராகி உள்ளது. கோடையின் வெப்பம் பெரு உக்கிரம் கொள்ளத் துவங்கியிருக்கும் பருவம். தார்ச்சாலைக்கும் மதில் சுவருக்கும் இடையில் அமைந்திருக்கிறது அச்செடி. எப்போதும் சாலையில் செல்லும் வாகனங்களால் செடியின் தழைகள் முழுவதிலும் புழுதி படிந்திருந்தது. அதனைக் கடந்து செல்லும் போது சிலமுறை அச்செடியைப் பார்த்தேன். கோடை, புழுதி வறட்சி என அத்தனை தடைகள் இருப்பினும் அதில் பல மலர்கள் மலர்ந்திருந்தன. அன்றலர்ந்த மலர்கள் என்ற கம்பன் நினைவில் எழுந்தான். மலர்ச்சி என்பது ஒரு சுபாவம். சூழல் வசதியோ அசௌகர்யமோ மலர்களுக்கு அதில் எந்த சொல்லும் இல்லை. எந்த புகாரும் இல்லை. அவை மலர்ந்திருக்கின்றன. யோகம் மலர்தல் என ஏன் கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
நந்தி மலர்ச்செடிக்கு ஒரு வாளியில் நீர் கொண்டு சென்று அதன் மீது மழை போலத் தூவினேன்.
Saturday, 16 March 2024
பேரம் ( நகைச்சுவைக் கட்டுரை)
Friday, 15 March 2024
சங்கிரகம் (மறு பிரசுரம்)
Wednesday, 13 March 2024
அரசமரம் - சட்ட விரோத மரம் வெட்டுதல் - புகார் மனு
ஊருக்கு அருகில் இருக்கும் சிறு கிராமம். அதில் கிராமச் சாலையில் அமைந்திருந்த 20 வயது கொண்ட அரசமரம். நேற்று மாலை வெட்டப்பட்டதாக இன்று காலை தகவல் அறிந்தேன். மரம் வெட்டப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்த்த பின் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒரு மனு அனுப்பினேன். அந்த மனுவின் தமிழாக்கம் கீழே :
அத்தனை பிரும்மாண்ட மரத்தை வெட்ட எப்படி மனம் துணிகிறது ? ஒரு அரசமரம் என்பது எவ்வளவு பெரிய உயிர் ? எத்தனை உயிர்களுக்கு வாழ்விடமாகவும் உணவாகவும் விளங்கக் கூடியது?
முக்கால் பாகம் வெட்டப்பட்டு விட்டது. மீதி கால் பாகம் மூலம் மீண்டும் மரத்தை துளிர்க்க வைக்க முயல வேண்டும்.
*****
அனுப்புநர்
Sunday, 10 March 2024
பிரம்மாபுரம்
பிரம்மாபுரம் தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமான ஊர். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தர் பிறந்த ஊர். பக்தி இலக்கிய காலகட்டத்தில் நாடெங்கும் பயணித்து தம் பதிகங்களால் வெகுமக்கள் மனதிலும் உணர்விலும் சைவத்தை நிலை கொள்ளச் செய்தவர்களில் முக்கியமானவர் ஞானசம்பந்தர். ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோர் அந்த காலகட்டத்தின் முக்கிய நபர்கள். அம்மையப்பன் திருஞானசம்பந்தருக்குக் காட்சி கொடுத்து அம்மை சிறு மகவாயிருந்த சம்பந்தருக்கு ஞானப்பால் அளித்தது பிரம்மாபுர ஆலய குளக்கரையில் என்பது ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் திருமுலைப்பால் விழா இங்கே நடைபெறும்.
இன்று பிரம்மாபுரம் ஆலயம் சென்று வர வேண்டும் என்று தோன்றியது. காலை உணவருந்தி விட்டு புறப்பட்டேன். பேருந்தில் செல்ல விரும்பினேன். பேருந்தில் செல்லும் போது நான் என் சக குடிமக்களை அணுக்கமாக அறிகிறேன். பேருந்தின் ஜன்னல் வழி காட்சிகளின் மூலம் சமூகத்தின் பொருளியல் நிலையை பொருளியல் மாற்றங்களைக் காண முடிகிறது. பேருந்தும் ரயிலும் எனக்கு விருப்பமான போக்குவரத்து சாதனங்கள். ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று பேருந்து 80 சதவீத பயணிகளுடன் மட்டுமே இருந்தது. செல்லும் போதும் திரும்பி வரும் போதும்.
சில ஆலயங்களுக்கு அங்கே இருக்கும் ஊர்மக்கள் அதிக அளவில் வருகை புரிந்து வழிபடுவார்கள். பிரம்மாபுரம் மக்களுக்கும் அந்த வழக்கம் உண்டு. சில மாதங்களுக்கு முன்னால் குடமுழுக்கு நடைபெற்றது. பிரம்மாபுரம் ஆலயம் பேராலயம். அதில் இருந்த மண்டபத்தின் தூண் ஒன்றில் சாய்ந்து திருஞானசம்பந்தர் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். சிறு குழந்தை. இறைவனின் பிரியத்துகுப் பாத்திரமான அருட் குழந்தை. சம்பந்தரின் தமிழ் நீரெனப் பரவி நிறைவது ; தீயென மேலெழுவது. சம்பந்தர் பதிகங்களை முழுமையாக ஒருமுறை வாசிக்க வேண்டும் என எண்ணினேன். வாய்ப்பு இருந்தால் காணொளிகளில் இருக்கும் ஓதுவார்கள் பாடிய சம்பந்தர் தேவாரத்தையும் கேட்க விரும்பினேன்.
இன்று கொங்கு நாட்டிலிருந்து திரளான மக்கள் பிரம்மாபுரம் ஆலயத்துக்கு வருகை புரிந்திருந்தனர். அவர்களின் பேச்சு மொழியிலிருந்து அதனை யூகித்துக் கொண்டேன். கொங்கு மக்களுக்கு திருமுறைகள் மேல் பெரும் ஈடுபாடு உண்டு.
பேரியற்கை என்பது ஒரு பெரும்கடல். நாம் அதன் கரையின் ஒரு துளி மணல்.
Saturday, 9 March 2024
ஒரு மகிழ்ச்சியான செய்தி
கோவிட் தொற்று காலத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக செயல் புரியும் கிராமத்தில் நாம் ஒரு செயலை முன்னெடுத்தோம். கோவிட் தொற்றுக்கான தடுப்பூசி போடப் பட்ட போது செயல் புரியும் கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களையும் நேரில் ஒருமுறை சந்தித்து கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம். அவ்வாறு சந்திக்கையில் எட்வர்ட் ஜென்னர் தடுப்பூசியை உருவாக்கிய விதம் , ஜென்னர் கண்டுபிடிப்பால் அம்மை நோய் இறப்புகள் கட்டுப்படுத்தப்பட்டது, கோவிட்டுக்கு இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசி, நம் நாட்டில் தயாராகியிருக்கும் தடுப்பூசி உலகின் பல நாடுகளுக்கு தானமாக வழங்கப்பட்டது ஆகிய விபரங்களைக் கூறி கிராமத்தில் இருக்கும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். மக்கள் தடுப்பூசி குறித்து தங்களுக்கு இருக்கும் ஐயங்களை கேட்டார்கள். அதற்கு நாம் விளக்கங்கள் அளித்தோம். ஒரு நாளைக்கு ஐம்பதிலிருந்து எழுபது வீடு என்ற கணக்கில் கிராமத்தில் இருந்த ஐந்நூறு வீடுகளையும் சந்தித்ததால் தடுப்பூசி குறித்த பேச்சு அந்த கிராமத்தில் பொது உரையாடல் மூலம் பரவத் தொடங்கியது. ''Word of mouth'' என்ற முறையில் கிராமம் முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
பின்னர் அந்த கிராமத்தின் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தொடங்கினர். சிறுக சிறுக பெரும் எண்ணிக்கையில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதாவது அந்த கிராமத்தின் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர். இதில் இன்னொரு ஆச்சர்யம் இருந்ததை பின்னாட்களில் அறிந்தேன். அதாவது தமிழகத்தில் மிகக் குறைவாக கோவிட் தடுப்பூசி இட்டுக் கொண்ட மாவட்டங்களில் மயிலாடுதுறை ஒன்று. மாவட்டத்தில் 45 சதவீத மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றனர். மீதி மக்களுக்கு தடுப்பூசி குறித்து அச்சங்கள் தயக்கங்கள். புறச்சூழல் இத்தனை எதிர்மறையாக இருப்பினும் நாம் செயல் புரிந்த கிராமத்தில் 90 சதவீதம் என்ற பெரும் இலக்கத்தை கிராம மக்கள் சாத்தியமாக்கினர்.
செயல் புரியும் கிராமத்தின் மிக அதிக மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அந்த கிராமம் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றது. அதற்காக சுதந்திர தினம் ஒன்றில் மாவட்ட ஆட்சியரின் விருதைப் பெற்றது.
செயல் புரியும் கிராமத்தில் இப்போது ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட இருப்பதாக அறிய நேர்ந்தது. தடுப்பூசி விஷயத்தில் செயல் புரியும் கிராம மக்கள் வெளிப்படுத்திய ஆர்வமும் ஈடுபாடும் ஆரம்ப சுகாதார நிலையம் அங்கே அமைவதற்கான பல காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி.