Thursday, 31 March 2022
நாற்றங்கால்
Tuesday, 29 March 2022
தீர்வுகளின் பாதை
Sunday, 27 March 2022
மிகப் பெரிய உடற்பயிற்சிக்கூடம்
Friday, 25 March 2022
வான் புவி
Tuesday, 22 March 2022
பணிதல்
கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். அதனால் எனது வாழ்க்கைமுறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நான் சிந்திக்கும் விதத்தில் - செயலாற்றும் விதத்தில் - மனிதர்களைப் புரிந்து கொள்ளும் விதத்தில் என நிறைய மாற்றங்கள் அகவயமாகவும் புறவயமாகவும் நிகழ்ந்துள்ளன. எந்த விஷயத்தையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு விரிவான பின்புலத்தில் வைத்து சிந்தித்தல், புரிந்து கொள்ளும் திறனில் கூர்மையாயிருத்தல், உறுதியான நிதானமான அணுகுமுறையில் செயல்களை ஆற்றுதல், எந்நிலையிலும் சோர்வடையாமல் இருத்தல் ஆகிய தன்மைகளை எனது இயங்குமுறையாகக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் நானாவித விஷயங்கள் குறித்தும் சிந்தித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறேன். இயல்பாகவே படைப்பூக்கம் கொண்ட மனம் என்னுடையது. கற்பனை எனது அறிதல் முறையாக இருந்திருக்கிறது. கற்பனை கொண்ட மனம் என்னை நூல்களை வாசிக்கச் செய்தது. ஓர் இலக்கிய வாசகன் என்னும் எண்ணமே பெரும் பெருமிதத்தை அளித்தது. மிக அதிக எண்ணிக்கை கொண்ட நூல்கள் என்று கூறமுடியா விட்டாலும் கணிசமான எண்ணிக்கையில் நூல்களை வாசித்திருக்கிறேன்.
அதன் பின்னர் ஓர் கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினேன். எனது நலம் விரும்பிகள் மிகவும் விசனப்பட்டார்கள். உணர்ச்சிகரமான மனமும் கற்பனையில் மிதக்கும் குணமும் கொண்ட எனக்கு திட்டவட்டமான தன்மை கொண்ட வணிகம் சரி வருமா என்ற ஐயம் அவர்களுக்கு இருந்தது. ஓர் செயலை நிகழ்த்த இடம், பொருள், ஏவல் என்ற மூன்று விஷயங்கள் கவனம் கொள்ளப்பட வேண்டும் . இந்த மூன்றும் சரிசமமான இடத்தில் உறுப்புகளாக உள்ள துறை கட்டிடக் கட்டுமானம். துறை குறித்தும் துறையின் இயங்குமுறை குறித்தும் எனக்கு சரியான புரிதல் ஏற்பட்டது என்னுடைய நல்லூழ் என்றே சொல்ல வேண்டும். என் தொழில் சார்ந்த பணிகள் குறித்து எனக்கு திருப்தி இருக்கிறது. என் தொழில் எனக்கு முழுமையான சுதந்திரத்தையும் அளிக்கிறது.
இந்திய நிலத்தில் சில மோட்டார் சைக்கிள் பயணங்களை மேற்கொண்டேன். அந்த பயணம் என்னை எழுத்தை நோக்கி இட்டுச் சென்றது. பயணக் கட்டுரை எனது முதல் எழுத்து. அதன் பின் கவிதை, சிறுகதை, கட்டுரை, கம்ப ராமாயண ரசனைத் தொடர் என தொடர்ந்து எழுதினேன். வலைப்பூ துவங்கி தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எழுதி வருகிறேன்.
அதன் பின்னர் சமூகப் பணிகள் சிலவற்றில் ஈடுபட்டேன். உலகம் ஒரு குடும்பம் என்கிறது இந்திய மரபு. உலகின் அனைத்து உயிர்களும் நலம் பெற்று வாழ வேண்டும் என்பதே இந்திய மரபின் பிரார்த்தனையாக இருக்கிறது. நம் மரபும் நம் மரபின் ஆசிரியர்களும் காட்டிய வழியில் எனது சமூகப் பணிகளை வடிவமைத்துக் கொள்கிறேன். இதில் என் பங்களிப்பு என்பது எதுவுமே இல்லை. நான் வெறும் கருவி மட்டுமே.
இன்று காலை செய்ய வேண்டும் என யோசித்து நிலுவையில் வைத்திருக்கும் பணிகளை பட்டியலிட்டேன். பதினெட்டு பணிகள் நிலுவையில் இருந்தன. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறு பணியிலிருந்து பெரும் பணிகள் வரை. இந்த பணிகள் உண்மையிலேயே அளவில் பெரியவை. ஒரு மனிதனின் செயல் திறனுடன் ஒப்பிடுகையில் இந்த பணிகள் பலமடங்கு பெரியவவை. இருப்பினும் இவற்றை ஆற்றும் போது ஒருநாள் கூட நான் சோர்ந்தது இல்லை. ஒருநாள் கூட நான் பாரமாக உணர்ந்தது இல்லை. ஏனென்றால் இந்த பணிகளின் மூலம் பலர் என்னுடன் உணர்வுபூர்வமாக இணைந்துள்ளார்கள். பலருடன் நான் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறேன். அந்த இணைப்பு அளிக்கும் சக்தியே என்னை - எங்களை - நம்மைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.
’’மை நஹி - தூ ஹி’’ என ஒரு வாசகம். ‘’நான் அல்ல - எல்லாம் நீயே’’ என்பது அதன் பொருள்.
Saturday, 19 March 2022
''காவிரி போற்றுதும்’’ - மீண்டும் செயல் களத்தில்
Thursday, 17 March 2022
அனாயாசம் - வாசகர் கடிதம்
அன்புள்ள பிரபு,
கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.கனிகளில் நெல்லிக்கனி சிறப்பானது.சித்தப்பாவும் சிறப்பான மனிதர்;அரிய மனிதர் ;அதியமான் அவ்வைப்பாட்டிக்கு அருளிய நெல்லிக்கனியை ஒத்தவர்; வாழ்வுக்கும் நிழல் தரும் நிழலாக அனைவருக்கும் திகழ்ந்தவர்.
Wednesday, 16 March 2022
உறுதி ( நகைச்சுவைக் கட்டுரை)
பணி செய்து கிடத்தல் ( நகைச்சுவைக் கட்டுரை)
’’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளர் காலையில் எழுந்ததும் அவர் அன்று செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்று யோசிக்கிறார். அவர் செய்ய வேண்டிய பணிகளைக் காட்டிலும் மிச்சம் வைத்திருக்கும் பணிகள் அதிகம் இருப்பது அவருக்குத் திகைப்பைத் தருகிறது.
இன்று காலை ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு சலூனுக்கு ஏழு நூல்கள் கொண்ட தொகுப்பை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அமைப்பாளருக்கு சலூன்காரரின் முகம் நினைவில்லை. அங்கே சென்றால் ஞாபகம் வரக்கூடும்! பத்து நாளாக சலூன்காரர் அமைப்பாளரிடம் கூடுதலாக ஒரு செட் புத்தகம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அமைப்பாளர், ‘’அண்ணன் ! பலவிதமான வேலைல இருக்கன் அண்ணன். கோச்சுக்காதீங்க. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை ஞாபகப்படுத்துங்க’’ என்று சொல்லியிருந்தார். சலூன்காரர் பதினைந்து நாளில் மூன்று தடவை ஞாபகப்படுத்தி விட்டார். அமைப்பாளர் கையில் உபரியாக சில செட் புத்தகங்கள் உள்ளன. ஆனால் அவருடைய பிரச்சனை அதில்லை. சலூன்காரர் , ‘’சார் ! நீல கலர் பேக் டிராப்ல சுவாமி விவேகானந்தர் ஃபோட்டோ கொடுத்தீங்கல்ல. அத ஒரு கஸ்டமர் எனக்கு வேணும்னு கேட்டார். கொடுத்திட்டன். இப்ப எனக்கு ஒன்னு வேணும் சார்’’ என்றார். அமைப்பாளருக்கு மக்கள் சுவாமிஜி மேல் அவ்வளவு பிரியமாக இருப்பது சந்தோஷம் தான் என்றாலும் இப்போது அவர் கையிருப்பில் ஃபோட்டோ இல்லை. வேலை முழுதாக முடியாது. பெண்டிங் இருக்கும். என்ன செய்வது என்று யோசித்து எந்த முடிவும் எடுக்காமல் பத்து நாளாக இருந்து விட்டார். அடுத்த ஃபோன் கால் வருவதற்குள் சலூன் கடைக்காரரை சந்திப்பது தான் உசிதம் என இன்று காலை புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். சலூன்காரருக்கு அமைப்பாளரைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். சலூன்காரர் ‘’சார் ! ஃபோட்டோ கேட்டிருந்தனே ‘’ என்றார். நாளைக்கு மெட்ராஸ் போறன். அப்ப அவசியம் வாங்கிட்டு வரேன். என்று அமைப்பாளர் வாக்குறுதி தந்து விட்டார்.
சலூனில் ஷேவ் செய்து கொள்ள அமர்ந்திருந்தார் அமைப்பாளர். அப்போது ‘’ஹைனஸ்’’ என்ற இரு சக்கர வாகனத்துக்கு நாளிதழில் விளம்பரம் வந்திருந்தது. ஹோண்டா நிறுவனத்தின் வாகனம். அமைப்பாளர் ஹீரோ ஹோண்டா ஆதரவாளர். ஆனால் இப்போது அந்த கூட்டு நிறுவனம் ஹீரோ என்றும் ஹோண்டா என்றும் தனித்தனியாகி விட்டது. அமைப்பாளர் எலெக்ட்ரிக் வாகனத்துக்கு மாறிவிடலாமா என்று யோசிக்கிறார். ‘’பைமோ’’ என்று ஒரு வாகனம். அமைப்பாளருக்கு அந்த பெயர் பிடித்திருப்பதால் அதனை வாங்கலாம் என்று நினைக்கிறார். திடீரென இன்னும் சிக்கனமாக சைக்கிள் வாங்கி வைத்துக் கொண்டால் என்ன என்று எண்ணுகிறார். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என்பது அமைப்பாளரின் எண்ணம். ஹைனஸ்ஸிலிருந்து சைக்கிளுக்கு பைமோ நெக்ஸான் மார்க்கமாக ஏன் தன் மனம் பயணிக்கிறது என்பதை அமைப்பாளரால் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று அமைப்பாளர் வழக்கம் போல் முடிவு செய்தார்.
மெட்ராஸ் போக வேண்டியிருப்பது ஒரு தனிக்கதை. ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. அமைப்பாளரின் நண்பர் ஒருவரின் மகன் சிவில் எஞ்சினியரிங் படித்து விட்டு வேலை கேட்டு அமைப்பாளரிடம் வந்தார். இளைஞர். வெயிலில் நிற்கும் வேலை வேண்டாம் என்ற முன்முடிவுடன் இருக்கிறார் அந்த இளைஞர். பங்குனி வெயிலில் பாடாய் கிடப்பவர் அமைப்பாளர். அவரிடம் ஒரு இளைஞர் வெயிலில் நிற்காமல் சிவில் எஞ்சினியரிங் துறையில் வேலை கேட்டால் அமைப்பாளருக்கு எப்படி இருந்திருக்கும் என்பது எவராலும் யூகிக்கத் தக்கதே. ‘’அங்கிள்! எனக்கு வெயில்ல நிக்கற சைட் ஒர்க் வேணாம். நான் ஆஃபிஸ்ல கம்ப்யூட்டர்ல டிராயிங் போடறன். எனக்கு அந்த வேலைதான் வேணும்’’. சென்னையில் இருக்கும் தன்னுடைய சகோதரன் என எண்ணும் அளவு நெருக்கம் கொண்ட நண்பனிடம் விஷயத்தைக் கொண்டு போனார் அமைப்பாளர். ‘’அண்ணன்! அந்த பையனை பேங்க் எக்ஸாம் எழுதச் சொல்லுங்க. அது தான் அவனுக்கு சரியா இருக்கும்’’. சென்னை நண்பன் சிவில் எஞ்சினியர் தான். மழைக்குக் கூட சிவில் சைட் பக்கம் ஒதுங்காமல் வங்கி அதிகாரி ஆகி விட்டான் என்பது அமைப்பாளருக்கு அப்போது தான் நினைவில் வந்தது. இளைஞனிடம் அதைச் சொன்னார் அமைப்பாளர். சென்னையில் ஒரு கோச்சிங் செண்டரில் சேர்ந்து படி என்று சொன்னார் அமைப்பாளர். ‘’அங்கிள்! என்னை கோச்சிங் செண்டரில் சேத்து விடுங்க.’’ இளைஞன் சொன்னான். ‘’பேரண்ட்ஸ் என்ன பிள்ளை வளக்கறாங்க. காலேஜ் முடிச்ச பையன் எல்.கே.ஜி ஸ்டூடண்ட் போல இருக்கானே’’ என அமைப்பாளர் எண்ணினார். ஆனால் அவரால் வெளியில் சொல்ல முடியாது. அமைப்பின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர் இளைஞனின் தந்தை. ‘’தம்பி! எனக்கு பலவிதமான ஒர்க்ஸ் இருக்கு. கார் எடுத்துக்கிட்டு காலைல 5 மணிக்கு இங்க கிளம்பறோம். பதினோரு மணிக்கு சென்னைல இருக்கோம். இன்ஸ்ட்டியூட் அட்மிஷனை ஒரு மணிக்குள்ள முடிக்கறோம். ‘’சங்கீதா’’ல லஞ்ச். நைட் 8 மணிக்கு ஊருக்கு வந்துடறோம். அப்பாவையும் கூட வரச் சொல்லு.’’ இளைஞனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அடுத்த நாளே புறப்பட வேண்டியிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தன் மற்ற பணிகளைத் திட்டமிட்டார் அமைப்பாளர். அந்த வேலையை தள்ளி வைக்க ஒத்திப் போட எத்தனை சாத்தியம் இருக்கிறதோ அத்தனையையும் பயன்படுத்தினான் இளைஞன். கடைசியாக நாளை காலை 5 மணிக்கு கிளம்பலாம் எனச் சொல்லியிருக்கிறான். அதுவும் தள்ளிப் போகுமோ என்ற பீதி அமைப்பாளருக்கு இருக்கிறது.
சென்னை போக வேண்டிய வேலை இருக்கிறது என்று தனது நண்பரிடம் இரண்டு நாட்கள் முன்னால் சொன்னார் அமைப்பாளர். ‘’பிரபு! விகடன் பப்ளிகேஷன்ஸ்ல ‘பொன்னியின் செல்வன்’ கிளாசிக் எடிஷன் போட்டிருக்காங்க. அத எனக்கு ஒரு செட் வாங்கிட்டு வந்துடுங்க. ‘’
அமைப்பாளருக்கு கோவை செல்ல வேண்டிய வேலை ஒன்று பெண்டிங் இருக்கிறது. திருச்சி செல்ல வேண்டிய வேலை ஒன்றும் பெண்டிங்.
இவற்றை யோசித்த போது செயல் புரியும் கிராமத்துக்கு போய் ஒரு வாரமாகிறதே ஃபோன் செய்யலாம் என்று ஃபோன் செய்தார். ‘’சார் ! என்ன சார் எங்க ஊருக்கே வர மாட்டீங்கறேங்க’’ . அமைப்பாளர் பரிதாபமாக , ‘’போன வாரம் வந்திருந்தேனே அண்ணன்’’ என்றார். கிராமவாசி, ‘’ஒரு வாரம் ஆயிடுச்சு . உங்களைப் பாக்க முடியலையே’’ என்று வருத்தப்பட்டார்.
Monday, 14 March 2022
அனாயாசம்
சமீபத்தில் எழுதிய சிறுகதை ‘’அனாயாசம்’’ இன்று சொல்வனம் இதழில் வெளியாகி உள்ளது. அதன் இணைப்பு :
Sunday, 13 March 2022
ஷீரடி டயரி
கபர்டேவின் சொற்கள் வழியே வாசகன் அதனை உணர்கிறான்.
Friday, 11 March 2022
கால்சியம்
வித்துவான் தியாகராச செட்டியார்
Wednesday, 9 March 2022
காகம் - வாசகர் கடிதம்
நானாவித அலுவல்கள்
பலவிதமான பணிகள் நிறைந்துள்ளன.
’’காவிரி போற்றுதும்’’ பணிகள் தொடர்பாக நண்பர்கள் சிலரைச் சந்திக்க வெளியூர் செல்ல வேண்டியுள்ளது.
இரண்டு கிராமங்களில் கணக்கெடுப்புப் பணியைத் துவக்க வேண்டும். உத்யோகம் தொடர்பான வேலைகள் பகல் நேரத்தில் இருப்பதால் கிராமங்களில் கணக்கெடுப்பை காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மேற்கொள்ள வேண்டும். பணி முடிந்து 9.30 மணி அளவில் வீடு திரும்பி உத்யோக விஷயங்களை வழக்கம் போல் மேற்கொள்ளலாம்.
கணக்கெடுப்பை முழு நேரமாக மேற்கொண்டால் - ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற கணக்கில் - முழு கிராமத்தையும் நிறைவு செய்ய பத்து நாட்கள் ஆகும். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் என மேற்கொண்டால் முப்பது நாட்கள் ஆகும். மெதுவாக முன்னேறிச் சென்றாலும் முன்னே சென்று கொண்டிருப்பது நலம் பயக்கும் ஒன்றே.
நேற்று ஒரு சிறுகதை எழுதினேன்.
பலவிதமான பணிகளில் ஈடுபடுவது அகத்தில் உற்சாகத்தை நிரப்புகிறது.
Monday, 7 March 2022
இரவு பகல்
இரண்டு நாட்களுக்கு முன்னால், இரவு 10.15க்கு ஒரு நண்பர் அலைபேசியில் அழைத்தார். அவரது உறவினர் ஒருவர் பயணித்த காருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது எனத் தெரிவித்தார். ஊரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் விபத்து. வண்டியில் பயணித்தவர்களுக்கு இங்கேயிருந்து ஒரு வாடகை வாகனம் ஏற்பாடு செய்து அனுப்பினோம். பின்னர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து தெரிவித்து விட்டு வாகனத்தை பட்டறைக்கு எடுத்துச் சென்றோம். கார் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்த பட்டறை. நள்ளிரவு 1 மணி அளவில் வாகனத்தை அங்கே விட்டு விட்டு உடனிருந்தவர்களை ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்தில் பயணித்து ஊர் வந்து சேருமாறு சொல்லி விட்டு நானும் நண்பரும் இரண்டு மோட்டார்சைக்கிள்களில் பயணித்து ஊர் வந்து சேர்ந்தோம். அப்போது காலை 4 மணி. சில மணி நேரம் படுத்து உறங்கி விட்டு எழுந்து குளித்துத் தயாராகி மீண்டும் விபத்து நிகழ்ந்த பகுதியின் காவல் நிலையம் சென்று மனு ரசீது , சான்று பெற்றுக் கொண்டு பட்டறைக்குச் சென்று வாகனக் காப்பீடு தொடர்புடைய வேலைகளை முடித்து விட்டு மாலை 6 மணிக்கு ஊர் திரும்பினோம். வாகனம் ஒரு வாரத்தில் தயாராகும் என்றார்கள். கிட்டத்தட்ட இருபது மணி நேரம் தொடர்ச்சியாக அலைந்து கொண்டே இருந்தோம். எவ்வளவு பரபரப்பிலும் மனதின் ஒரு பகுதி எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறது - மிக அமைதியாக.
Thursday, 3 March 2022
பதில் கடிதம்
Wednesday, 2 March 2022
விழிப்புணர்வு
ஆற்றல்
Tuesday, 1 March 2022
பிள்ளைக் கனியமுது