Friday, 30 September 2022
பொன்னியின் செல்வன்
வினையும் விளைவும்
கணக்கும் தொகுப்பும்
அனுமதியின்றி மரம் வெட்டியதற்கு ஒரு அபராதம் விதிக்கப்பட்டால் இவ்வாறான செயலைச் செய்ய எண்ணம் கொண்டுள்ள பலருக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும் என்பதால் தான் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினேன். பொதுமக்களில் எவரும் இது போன்ற விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம் தீவிரமாக இருப்பதால் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் எவ்வித தயக்கமும் இன்றி இவற்றில் ஈடுபடுகிறார்கள். அது முழு உண்மையல்ல என்பதை உணர்த்தவே இதில் ஈடுபட்டுள்ளேன்.
Sunday, 25 September 2022
வருகை
சமீபத்தில் ’’வருகை’’ என்ற சிறுகதையை எழுதினேன். அது சொல்வனம் இதழில் பிரசுரமாகியுள்ளது. அதன் இணைப்பு கீழே :
Friday, 23 September 2022
முதல் அழைப்பு
Thursday, 22 September 2022
அஞ்சல் அட்டைக் கடித வடிவம்
Tuesday, 20 September 2022
அஞ்சல் அட்டைகள்
எனக்குத் தெரிந்து அஞ்சல் அட்டையின் விலை 15 பைசாவாக இருந்திருக்கிறது. அதன் பின்னர் 25 பைசாவாக ஆனது. இப்போது ஒரு அஞ்சல் அட்டையின் விலை 50 பைசா.
இவ்வளவு குறைவான தொகையில் பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு ஒரு அஞ்சல் அட்டை பயணிக்கக் கூடியது என்பது அற்புதமான ஒன்று. இதனை அர்ப்பணிப்புடன் கூடிய ஆயிரக்கணக்கான தபால் ஊழியர்கள் சாத்தியமாக்குகிறார்கள்.
சிறு வயதில் நான் அஞ்சல் அட்டைகள் எழுத விரும்புவேன். உறவினர்களுக்கு நண்பர்களுக்கு என அடிக்கடி அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதுவேன்.
ஒரு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் 20 தேக்கு மரக்கன்றுகளை வழங்க உத்தேசம் கொண்டு செயல்களைத் துவக்கி உள்ளேன். ஏற்கனவே பரிச்சயம் உள்ள கிராமம். நமது உத்தேசத்தை அந்த கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சென்று சேர்க்க வேண்டும். அதற்கு நான் தேர்ந்தெடுத்த தகவல் சாதனம் அஞ்சல் அட்டை. குறைந்தது 250 குடும்பங்கள் இருக்கக் கூடும். அவர்கள் அனைவரையும் சென்றடைய தபால் கார்டு உதவும் என்பதும் தேக்கு குறித்து மக்களுக்குள் ஒரு பேச்சு உருவாகவும் துணை புரியும் என்ற எதிர்பார்ப்பும் இந்த முறையைத் தேர்ந்தெடுத்தற்கான காரணம்.
ஒரு நாளைக்கு 25 கார்டாவது எழுதி போஸ்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வேலை 10 நாட்களில் நிறைவடையும். ஒன்று ஒன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
Monday, 19 September 2022
ஒரு சுற்று
Saturday, 17 September 2022
மௌனம்
Friday, 16 September 2022
அவதானம்
Wednesday, 14 September 2022
தினசரியை
Tuesday, 13 September 2022
நுழைவு - 3
Monday, 12 September 2022
நுழைவு - 2
இன்று உடல் சற்று சோர்வாக இருந்தது. எனினும் உள்ளுணர்வு இந்த விரதத்தை எண்ணியவாறு நிறைவு செய்வேன் என்று கூறியது.
இன்று ஒரு நூலில் சில பக்கங்கள் வாசித்தேன்.
நண்பர் ஒருவர் வெளியூர் சென்றிருக்கிறார். ரயிலில் ஊர் திரும்புகிறார். நாளை காலை 6 மணிக்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தன்னை அழைக்க காரில் வர முடியுமா என்று கேட்டார். எனக்கு விரத நினைவு இல்லை. சரி என்று சொல்லி விட்டேன். பின்னர் தான் நினைவு வந்தது. டிரைவிங் தெரிந்த ஒருவரை ஏற்பாடு செய்து கொண்டேன்.
எண்பதும் எண்பதும் நூற்று அறுபது கிலோமீட்டர் பயணிப்பது என்பது உடலின் சக்தியை பெருமளவு எடுக்கும்.
நிலுவையில் இருக்கும் சில பணிகள் குறித்து யோசித்தேன். உண்மையில் ஒருநாள் பொழுதில் நிறைய நேரம் கிடைக்கிறது. மனம் வழக்கமாக இயங்கும் செயல்முறையிலிருந்து மாற்றம் கொண்டு யோசிக்க அவகாசம் வாய்க்கிறது.
Sunday, 11 September 2022
நுழைவு
இயக்கம்
Friday, 9 September 2022
நீங்குதல்
Thursday, 8 September 2022
கோப்பு
தி.ஜாமம்
Wednesday, 7 September 2022
பாபநாசம்
நான் சிறுவனாயிருந்த போது , இரண்டு ஆண்டுகள் பாபநாசத்தில் குடியிருந்தோம். அதாவது , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம். காவிரியும் அதன் கிளை நதிகளும் பாபநாசத்தை தன் மகவெனக் கையில் ஏந்திக் கொள்ளும். வருடத்தில் முதல் முறையாக தண்ணீர் வரும் போது ஆற்றுமணலில் நீர் உள்ளே செல்லும் போது மணலின் இடைவெளிகளிலிருந்து ‘’குபுக் குபுக் குபுக்’’ என காற்று வெளிவரும் ஓசை கேட்கும். ஆறு முழுக்க அந்தப் பேரோசை நிரம்பி ஓங்காரமென ஒலிக்கும். குடமுருட்டி என ஒரு ஆறு. அதில் நான் குளிக்கச் செல்வேன். ஆற்றில் இறங்கினாலே சிறு சிறு மீன்கள் வந்து உடலில் லேசாக கடிக்கும். என் மொத்த உடலையும் மீன்கள் கொத்தி தின்று விடுமோ என நினைப்பேன். நிறைய பேர் உடன் குளிப்பதால் அவ்வாறு நடக்காது என எனக்கு நானே சமாதானம் செய்து கொள்வேன்.
இன்று காவிரியில் குளித்த போது உடலை சில மீன்கள் கொத்தின. மீன்களால் கொத்தப்பட்டது மகிழ்ச்சியைத் தந்தது.
Tuesday, 6 September 2022
ஸ்நானம்
Monday, 5 September 2022
நினைவு
தீர்த்தம்
நீரை வாழ்வளிக்கும் அமிர்தமாக உணர்வது இந்திய மரபு. நதியை நூற்றுக்கணக்கான தலைமுறைகளுக்கு கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் அன்னையாகக் காண்பது இந்தியர்களின் இயல்பு. இந்தியர்கள் நதிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய சுக துக்கங்களை நதியே அறிகிறது. அவர்களுடைய பிராத்தனைகளை நதியே சுமந்து செல்கிறது. அவர்களுடைய துயரங்களை நதியே நீக்குகிறது. நதியில் மூழ்குதல் என்பதை ஒரு வழிபாடாக மேற்கொள்வது இந்தியர்களின் பழக்கம். காவிரியிலிருந்து சில நூறு அடிகள் தொலைவில் எனது வீடு அமைந்துள்ளது. இன்று காலை கருக்கல் பொழுதில் காவிரிக்குச் சென்றேன். நதி சலசலக்கும் ஓசை இசையெனக் கேட்டது. நதியில் மூழ்கினேன். மீண்டும் மீண்டும் மூழ்கி மூழ்கி எழுந்தேன். உடலும் மனமும் உணர்வும் பெரும் நம்பிக்கை கொண்டன. ஒரு நதித்தடம் என்பது எத்தனை பேருக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கையின் சாட்சியம். இந்த நதியில் எத்தனை மகத்தான மனிதர்கள் மூழ்கி எழுந்திருக்கிறார்கள். எத்தனை மகத்தான விஷயங்களின் ஆதாரமாக நதி இருந்திருக்கிறது. அகம் நதியென பிரவாகிக்க வேண்டியது. வாழ்வு நதியென அமைய வேண்டியது.
காவிரி போற்றுதும் ! காவிரி போற்றுதும் !
Sunday, 4 September 2022
இன்னொரு நிலம்
இன்று ஊருக்கு அருகே 3 ஏக்கர் நிலமொன்றில் 1200 தேக்கு கன்றுகள் நடும் பணியை ஒரு நில உரிமையாளர் துவக்கி உள்ளார். ‘’காவிரி போற்றுதும்’’ அவர் தேக்கு பயிரிட முடிவு செய்ததில் முக்கியக் காரணிகளில் ஒன்றாக இருந்தது. ஒரு கன்றை நடுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். விவசாயிகளின் வருமானம் பெருக வேண்டும் என பிராத்தித்து ஒரு தேக்கு மரக் கன்றை நட்டேன்.