Saturday, 1 February 2025

பூச்சி டயலாக்

 பாரதியார் ‘’காக்காய் பார்லிமெண்ட்’’ என்ற கதையை எழுதியிருக்கிறார். அதில் காகங்கள் கதாபாத்திரங்கள். தி.ஜா பூச்சிகளைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு எழுதியிருக்கும் கதை ‘’பூச்சி டயலாக்’’.

பஸ்ஸூம் நாய்களும்

 மாநகரம் பேதங்களின் உலகம். பேதங்களின் வெவ்வேறு வகை மாதிரிகள் நாளும் பொழுதும் காட்சியாகும் இடம் மாநகரம். நடுத்தர வர்க்க ஆசாமி ஒருவர் மாநகரம் ஒன்றின் அல்லல்களை அதில் தனது கையறு நிலையை கூறும் கதை ‘’பஸ்ஸூம் நாய்களும்’’.

நேத்திக்கு

 அறியாமையிலும் தமோ குணத்திலும் மூழ்கியிருக்கும் ஒருவர். அவருக்கு ஏற்றாற் போன்ற ஒரு மோசமான குழாம். சாரமின்மையின் இருளில் திளைக்கின்றனர் அவர்கள். அதனை ஒரு சிறு குழந்தை காண நேர்கிறது. தன் மழலை மொழியில் அச்சூழலின் கதையைச் சொல்கிறது. சாரமின்மையின் பலியாக ஒரு பேச முடியாத ஜீவன் பலியாகிறது. இதன் கதையே ‘’நேத்திக்கு’’.

தற்செயல்

பால்ய சினேகிதர்கள் வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். வாழ்க்கை இருவரிடமும் எண்ணற்ற மாறுதல்களைக் கொண்டு வந்திருக்கிறது. இருவரின் வாழ்க்கையிலும் திருப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உறவினர் திருமண விழா ஒன்றில் இருவரும் சந்தித்து உரையாடுகையில் இருவரும் சொல்லும் தத்தமது கதையே தி.ஜா வின் ‘’தற்செயல்’’