Tuesday 30 July 2024
பூந்தளிர்
Sunday 28 July 2024
நீரெனில் கடல்
Thursday 25 July 2024
நதிமூலம்
Tuesday 23 July 2024
துலா
Sunday 21 July 2024
எதிர்பாராத இனிமை
ஊருக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் எனது நண்பரான ஐ.டி ஊழியர் வசிக்கிறார். அவர் தனது 3 ஏக்கர் நெல் வயலை முழுமையாக தேக்குத் தோட்டமாக மாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடப்பட்ட அந்த தேக்கங்கன்றுகள் இன்று 15 அடிக்கும் மேற்பட்ட உயரம் வளர்ந்துள்ளன.
வன வாழ்க்கை - அத்தியாயம் 11- உயர் நெறிகள்
மனிதர்களுக்கு சிறு வயதிலேயே இயற்கையின் பிரும்மாண்டத்தை உணரும் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட வேண்டும். இயற்கை என்பது பெரும் பிரவாகம். அதனை உணர்பவர்கள் கைக்கொள்ளும் நெறிகள் உயர் நெறிகளாக இருக்கும்.
Saturday 20 July 2024
மச்சாவதாரம்
வன வாழ்க்கை - அத்தியாயம் 10 - உணவும் உழைப்பும்
கடும் உடல் உழைப்பை நல்கக் கூடியவர்கள் உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு அதிகம் என்பது எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதே. குறைவான உடல் உழைப்பை அளிக்கக்க்கூடியவர்களும் அதிக உணவை உண்ணக் கூடிய பழக்கம் இருக்கிறது. அவர்கள் சகஜமான சுமுகமான உடல் இயக்கத்துக்கு ஒருவேளை உணவருந்தினால் போதுமானது. எனினும் மனிதர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்னும் பழக்கத்துக்கு ஆளாகி விட்டனர். மேலும் அந்த மூன்று வேளை உணவுக்கான செல்வத்தை ஈட்ட வாழ்நாள் முழுதும் பொருள் ஈட்டிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து மனிதர்கள் சிந்திக்க வேண்டும்.
Friday 19 July 2024
வன வாழ்க்கை - அத்தியாயம் 8 - கிராமம்
தோரோ வால்டன் ஏரிக்கரையில் வசித்த நாட்களில் எப்போதாவது வால்டனிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் கிராமத்துக்குச் செல்வதுண்டு. அங்கிருக்கும் மக்களை பார்த்து விட்டு அவர்களுடன் உரையாடி விட்டு மீண்டும் வால்டனுக்கு மீள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
Thursday 18 July 2024
நண்பர் அறிந்த மொழிகள்
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஓர் அறிஞர். அவர் ஏழு மொழிகள் அறிந்தவர். அவரைப் பற்றி நான் ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். ( ஒரு நண்பரின் யோசனை).
இன்று நேற்று அறிமுகமான வாசக நண்பரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் தனக்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகள் தெரியும் என்று கூறினார். ஒரு மோட்டார்சைக்கிள் பயணியாக நான் நாடு முழுதும் சுற்றியிருக்கிறேன். ஒரு மொழி என்பதன் அற்புதமான சாத்தியங்கள் எனக்குத் தெரியும். மனிதர்களை இணைக்க மொழி அற்புதமாக செயலாற்றும் ஒரு கருவி.
நண்பரின் அவதானங்கள் சிறப்பானவை. அவரது உரையாடல் மொழி மிக மென்மையானது. அவரது சொற்தேர்வுகள் நேர்த்தியாவை. உரையாடலின் போது தன்னுடைய சொந்த சேகரிப்பில் 1000 புத்தகங்கள் இருக்கும் என்று சொன்னார். எனது உள்ளுணர்வு அவர் எழுதக் கூடியவர் எழுத வாய்ப்புள்ளவர் என்று சொன்னது. அதனை அவரிடம் நேற்றே சொன்னேன். இன்று தான் அறிந்த மொழிகளைக் கூறியதும் அவரை மொழிபெயர்ப்பில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டேன். அவர் கூடிய விரைவில் மொழியில் படைப்பூக்கத்துடன் ஈடுபடுவார் என என் மனம் எண்ணுகிறது.
நண்பர் தனது தந்தையின் நினைவுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் தந்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, உருது, ஆங்கிலம் ஆகிய எட்டு மொழிகள் அறிந்தவர் என்று கூறினார். மானுடம் வெல்லும் என்னும் கம்பன் சொல் என் நினைவில் எழுந்தது.
வன வாழ்க்கை - அத்தியாயம் 7 - விவசாயம்
வால்டன் ஏரிக்கரையில் வசித்த ஆண்டுகளில் நிலத்தை திருத்தி பீன்ஸும் சோளமும் பயிரிடுகிறார் தோரோ. ஒரு சிறு நிலப்பகுதியில் இந்த முயற்சியை மேற்கொள்கிறார். மண்ணில் நின்று மண்ணுடன் தொடர்பு கொண்டு விவசாயம் புரிவதை ஒரு ஆன்மீக அனுபவமாகவே உணர்கிறார் தோரோ.
Wednesday 17 July 2024
வாசக நண்பர்
இன்று இரவு எனக்கு வந்திருந்த ஒரு வாசகர் கடிதத்தை மின்னஞ்சலில் கண்டேன். பின்னர் அந்த வாசகருடன் பேசினேன். ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். உரையாடல் எங்களை பல வருடம் பழகிய நண்பர்கள் போல் உணர வைத்தது.
நண்பர் தனது பத்து வயதிலிருந்து நூல்களை வாசிக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ஜெயகாந்தன். நவீன இலக்கிய வாசிப்பும் கவிதை வாசிப்பும் தீவிரமாகக் கொண்டிருக்கிறார்.
கம்பன் மீதும் தீவிர ஆர்வம். பி.ஜி. கருத்திருமன் ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ நூல் வழியே கம்பனுக்குள் பிரவேசித்திருக்கிறார். உ.வே.சா மீது பெரும் பிரியமும் மரியாதையும் கொண்டிருக்கிறார். என் சரித்திரம் நூலை தன் வாழ்வில் 150 முறையாவது வாசித்திருப்பேன் என்று சொன்னார்.
சமீபத்தில் வெளியான எனது சிறுகதையான ‘’சராசரிக்கும் கீழே’’ வாசித்து விட்டு அக்கதை குறித்து தனது அவதானம் ஒன்றைக் கூறினார். அவர் கூறியது மிக நுட்பமான அவதானம்.
நண்பரின் அறிமுகம் மிகவும் மகிழச் செய்தது.
குற்றமும் தீர்ப்பும் - வி. சுதர்ஷன் ( மறு பிரசுரம்)
பத்திரிக்கையாளர் வி.சுதர்ஷன் எழுதிய ’’குற்றமும் தீர்ப்பும் : அரசியல் படுகொலையும் சி.பி.ஐ விசாரணையும்’’ என்ற நூலை வாசித்தேன்.
1987 ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூர் வந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் கொல்லப்படுகிறார். அவரது உடல் சேலம் அருகில் இருக்கும் ஓமலூரில் கண்டெடுக்கப்படுகிறது. ஓமலூரில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்ட போது அது கேரள வழக்கறிஞருடையது என அறியப்படவில்லை. வழக்கறிஞரின் குடும்பம் அவர் காணாமல் போய்விட்டதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறது. பல வாரங்கள் செல்கின்றன. ஓமலூர் அருகே கண்டெடுக்கப்பட்ட உடலின் ஆடைகளில் இருந்த காகிதங்களை ஆராய்ந்த போது அதில் பெங்களூர் தங்கும் விடுதி ஒன்றின் முகவரி இருக்கிறது. கர்நாடகக் காவல்துறை கேரள வழக்கறிஞர் கடைசியாக தங்கியிருந்ததாக கூறும் விடுதிகளின் முகவரிகளில் ஒன்று அது. ஓமலூர் அருகே கிடைத்த உடல் குறித்து தமிழ்நாடு காவல்துறை விசாரிக்கிறது. வழக்கறிஞர் காணாமல் போனது குறித்து கர்நாட்க காவல்துறை விசாரிக்கிறது. காணாமல் போன வழக்கறிஞர் குறித்த வழக்கு தொடர்பான தீவிர கவனத்தையும் அழுத்தத்தையும் கர்நாடக பார் கவுன்சிலும் செய்த்த்தாள்களும் உண்டாக்குகின்றன. தொடர் கவனம் காரணமாக வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உத்தரவிடுகிறது மாநில அரசு.
சி.பி.ஐ விசாரணை அந்த வழக்கின் அறியப்படாத பல நிகழ்வுகளை நீதிமன்றத்தின் முன் வைக்கிறது.
குற்றம் செய்தவர்களை குற்றத்துக்கு உடந்தையாயிருந்தவர்களை தேடிச் சென்று அவர்கள் மூலம் குற்றச் செயலில் ஈடுபட்ட மற்றவர்களைக் குறித்து அறிந்து அவர்களைச் சுற்றி வளைத்து ஒவ்வொருவர் தனித்தனியாகக் கொடுக்கும் வாக்குமூலத்திலிருந்து நிகழ்ந்த குற்றம் குறித்த முழுச் சித்திரம் இந்த வழக்கில் உருவாக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த குற்றம் நிகழ்ந்து சில ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த ராஜிவ் படுகொலை புலன் விசாரணைக்கு இந்த வழக்கின் அனுபவங்கள் சி.பி.ஐ க்கு பெரிதும் உதவியிருக்கின்றன.
நூல் : ‘’குற்றமும் தீர்ப்பும் : அரசியல் கொலையும் சி.பி.ஐ விசாரணையும்’’ . ஆசிரியர் : வி. சுதர்ஷன் மொழிபெயர்ப்பு : ஈசன் விலை : ரூ. 200. பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்.
வன வாழ்க்கை - அத்தியாயம்-5 - தனித்திருத்தல்
ஏரிக்கரையில் அமைத்த வீட்டில் பல நாட்கள் பல பகல்கள் பல இரவுகள் கொட்டும் மழையை மட்டும் கண்டவாறு அமர்ந்திருக்கிறேன். இனிமையானது ஏகாந்தம். ஏகாந்தத்தில் நாம் பிரபஞ்சம் முழுமையும் நம்முடன் இணைந்து இருப்பதை உணர்கிறோம். கோள்கள், வான்மீன்கள், சூரியன், நிலவு என அனைத்தும் நம் உடன் இருக்கின்றன. மானுடர் தனித்திருக்க வேண்டும்.
Tuesday 16 July 2024
வன வாழ்க்கை - அத்தியாயம் 4- புள் சிலம்பல்கள்
அதிகாலைப் பொழுதிலிருந்து பறவைகள் கிரீச்சிடத் தொடங்குகின்றன. காகங்கள், குயில்கள், கரிச்சான்கள், புறாக்கள், மைனாக்கள் என புள்ளினங்கள் சிலம்பத் தொடங்குகின்றன. மனித மொழி குறிப்பிட்ட விதமான சப்தங்களுக்குள் கட்டுண்டிருக்க புள்ளினங்களின் சிலம்பல்கள் விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. புள்ளின சிலம்பல்களைக் கேட்டவாறு நாள் முழுதும் அமர்ந்திருப்பது ஒரு நிலை.
Monday 15 July 2024
சிறுகதை பிரசுரம் - ‘’சராசரிக்கும் கீழே’’
சமீபத்தில் எழுதிய சிறுகதை சொல்வனம் இதழில் பிரசுரமாகியுள்ளது. அதன் இணைப்பு கீழே. வாசிக்க இணைப்பை கிளிக் செய்யவும்.
வன வாழ்க்கை - அத்தியாயம் 3 - வாசிப்பு
Sunday 14 July 2024
குளம் - சில உரையாடல்கள்
வன வாழ்க்கை - அத்தியாயம் 2 - எனது வாழிடம்
ஒரு புதிய காலை பிறக்கிறது. லட்சக்கணக்கானோர் அன்றைய தினத்தின் உடல் உழைப்பு குறித்த நினைவுடன் விழிக்கின்றனர். லட்சத்தில் ஒருவர் அறிவார்ந்த கண்டடைதலுடன் எழுகிறார். கோடியில் ஒருவரின் தினம் கவித்துவத்துடனும் தெய்வீகத்துடனும் மலர்கிறது. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் தினமும் தெய்வீகத்துடன் உதிக்க வேண்டும் என விருப்பம் கொள்கிறார் தோரோ.
அதிகாலையில் நீராடுவதை ஓர் ஆன்மீக அனுபவம் என்கிறார் தோரோ. ஒவ்வொரு முறை நீராடும் போதும் நாம் புதிதாக புதிதாக பிறந்தவாறே இருக்கிறோம் எனக் குதூகலத்துடன் கூறுகிறார் தோரோ.
ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவருந்துதல் என்னும் பழக்கத்தை ஏன் ஒரு வேளை உணவருந்துதல் என பழகிக் கொள்ளக் கூடாது என கேட்கிறார். பத்து வகையான உணவை அருந்துவதை விட ஏன் மூன்று வகையான உணவை அருந்தக் கூடாது என்ற கேள்வியும் தோரோவுக்கு இருக்கிறது.
Saturday 13 July 2024
வன வாழ்க்கை - அத்தியாயம் 1 - லௌகிகம்
Friday 12 July 2024
வன வாழ்க்கை
கடந்த சில நாட்களாக ஹென்றி டேவிட் தோரா குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். இன்று அவரது நூல்களை வாசிக்க முற்பட்ட போது இன்று அவரது பிறந்த நாள் என்பதை தற்செயலாக அறிந்ததை ஒரு நல்நிமித்தம் என்றே கருதினேன். ஜூலை 12 ம் தேதி 1817ம் ஆண்டு அவர் பிறந்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள வால்டன் ஏரிக்கரையில் ஏரி நீரை மட்டும் பார்த்துக் கொண்டு இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் அவர் வாழ்ந்திருக்கிறார். வால்டன் அனுபவம் குறித்து அவர் எழுதிய நூல் ‘’வால்டன்’’. அந்நூல் ‘’வன வாழ்க்கை’’ என்றும் அறியப்படுகிறது. அந்நூல் வாசிப்பு குறித்து சில குறிப்புகளை எழுத உள்ளேன்.
வரிகள் / விளக்கங்கள் -4 (கோடை இரவின் கனவு)
Thursday 11 July 2024
வரிகள் / விளக்கங்கள் -3 (கோடை இரவின் கனவு)
Wednesday 10 July 2024
நீங்கள் விரும்பிய வண்ணம்
ஷேக்ஸ்பியரின் ‘’ As you like it" என்ற நாடகத்தை இன்று வாசித்தேன். ஷேக்ஸ்பியரின் சொற்கள் புதிய நிலப்பரப்பில் கொண்டு சேர்த்தது. அந்த புதிய பிராந்தியத்தையும் அங்கிருக்கும் புதிய மனிதர்களையும் கண்டவாறு இருக்கிறேன். ஷேக்ஸ்பியரின் நாடகக் காட்சிகளின் தருணங்கள் இன்று வரை பல மொழிகளின் திரைப்படங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியவாறு இருப்பது வியப்பைத் தந்தது.
வரிகள் / விளக்கங்கள் -2 ( கோடை இரவின் கனவு)
Tuesday 9 July 2024
14 மரங்கள் - 3 ஆண்டுகள்
வரிகள் / விளக்கங்கள் - 1 ( கோடை இரவின் கனவு)
Now, Fair Hyppolyta
ஷேக்ஸ்பியரின் கோடை இரவின் கனவு நாடகத்தின் முதல் வரி இவ்வாறு துவங்குகிறது. ’’இந்த கணம்’’ என்கிறார் தீசியஸ். இருப்பினும் நிகழ்காலத்தில் தீசியஸின் மனம் நிலைத்து இல்லை. இன்னும் சில நாட்களில் நிகழவுள்ள ஹிப்போலிட்டாவுடனான தனது திருமணம் குறித்த எதிர்பார்ப்பு மிகத் தீவிரமாக தீசியஸிடம் இருக்கிறது. இருப்பினும் சற்றே நிலைப்படுத்தி ‘’இந்த கணம்’’ என்கிறார்.
தீசியஸ் ஹிப்போலிட்டாவை ‘’அழகே’’ என்கிறார். ஹிப்போலிட்டாவிடம் தீசியஸ் காண்பது மேனி அழகையா? மன அழகையா? அவள் புற அழகைப் போலவே அக அகழும் கொண்டவளா?
Four happy days bring in another moon
அமாவாசைக்கு இரு நாட்கள் முன்பு அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். பழைய நிலவு தேய்ந்து முடியப் போகிறது. பின்னர் நிலவற்ற முழு இருளின் தினம். அடுத்த இரு நாட்களில் துவிதையை தினத்தில் நிலா காட்சி கொடுத்து வளர இருக்கிறது. காதல் வாழ்க்கை முடிந்து திருமண வாழ்க்கை தொடங்கும் ஆர்வத்திலும் உவகையிலும் உத்வேகத்திலும் இருக்கின்றனர் தீசியஸும் ஹிப்போலிட்டாவும்.
Four days will quickly steep themselves in night
Four nights will quickly dream away the time
ஹிப்போலிட்டா இவ்வாறு கூறுகிறாள். திருமண நாளை எதிர்நோக்கியிருக்கும் ஒரு பெண்ணின் கூற்று இது.
நான்கு நாட்கள் இரவின் அடர்ந்த பொழுதுகளில் மூழ்கும். இரவின் நான்கு அடர்ந்த பொழுதுகள் கனவெனக் கடக்கும்.
Monday 8 July 2024
தாகம் கொண்ட கனவு
வரிகள் / விளக்கங்கள்
Sunday 7 July 2024
கோடை இரவின் கனவு - ஷேக்ஸ்பியர்
Saturday 6 July 2024
கவிஞனின் மொழி
ஆங்கில மொழியின் ஊற்றுக்கண்ணாக ஷேக்ஸ்பியர் விளங்கியிருக்கிறார். அவர் கவிஞராகவும் இருந்திருக்கிறார் ; நாடக ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். அவரது நாடகங்களில் உள்ள சித்தரிப்புகளில் உரையாடல்களில் கவித்துவத்தின் கூறுகள் இருக்கின்றன. கவிமொழியின் கூருமுறை இருக்கிறது.
ஒரு ஷேக்ஸ்பியரின் நாடகத்தை வாசிப்போமானால் நாம் அறிந்த பல ஆங்கில் சொற்றொடர்கள் அந்த நாடக வசனங்களாக இருப்பதை சர்வ சாதாரணமாகக் காணலாம். அதாவது , ஷேக்ஸ்பியர் நாடக வரிகளே சாமானிய மக்களின் மொழிப் புழக்கத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு வியாபித்திருக்கின்றன.
ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியருக்குப் பின் பல கவிஞர்கள் உண்டு. ஷெல்லி, மில்டன், வால்ட் விட்மன், ராபர்ட் ஃபிராஸ்ட் ... எனினும் ஷேக்ஸ்பியரின் இடம் என்பது பெரியது. தனித்துவமானது. பிரத்யேகமானது.
ஷேக்ஸ்பியர்
தமிழ்நாட்டில் ஓர் ஆங்கிலப் பேராசியர் சிறந்தவர் என்று சிலாகிக்கப்பட்டால் அவர் ஷேக்ஸ்பியரில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர் என்பதிலிருந்தே கூறப்படும் என்பதை எவரும் நினைவு படுத்திக் கொள்ள முடியும்.
தமிழ்ப் படைப்பாளிகள் பலர் ஷேக்ஸ்பியர் மேல் தீராப் பிரியம் கொண்டவர்கள்.
ஷேக்ஸ்பியரை எளிதில் வாசிக்க ஒரு வழிமுறை சமீபத்தில் கிடைக்கப் பெற்றது. ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் நானூறு ஆண்டுகளுக்கு முந்தையது. எனினும் இப்போது வாசித்தாலும் அது சம கால ஆங்கிலத்துக்கு சிறு தொலைவிலேயே இருக்கிறது. ஷேக்ஸ்பியரை சம கால ஆங்கிலத்தில் வாசிப்பதை விட அவருடைய சொந்த பிரதியும் அதற்கு விளக்கமாக எழுதப்பட்ட சமகால ஆங்கிலப் பிரதியும் பக்கத்தில் பக்கத்தில் இருக்க வாசித்தால் எளிதில் வாசிக்க முடியும். அவ்வாறான ஒரு பிரதி அமைப்பு கிடைக்கப் பெற்றது. அதன் மூலம் ஷேக்ஸ்பியர் வாசிப்பொன்று துவங்கியுள்ளது.
ஷேக்ஸ்பியரை வாசிக்கும் போது ஒரு விஷயம் புரியும். இப்போது புழக்கத்தில் உள்ள ஆங்கிலம் என்பது ஷேக்ஸ்பியரின் பிரதியை விளைநிலமாய்க் கொண்டு அதில் முளைத்தெழுந்த நெல்மணிகளே என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
Friday 5 July 2024
ஒரு மனிதர் - ஒரு நண்பர் -ஒரு உதாரணம்
பழைய தஞ்சாவூர் மாவட்டம் - சில எண்ணங்கள் சில நினைவுகள்
Wednesday 3 July 2024
ரயில் பயணம்
நேற்று தஞ்சாவூர் சென்றிருந்தேன். டூ வீலரை ஸ்டாண்டில் கொண்டு விட்டதும் ஒரு நாள் வாடகை ரூ.15 என இருந்தது. வாடகை கூடியிருக்கிறதா என்று கேட்டேன். ரூ.10 வாடகை இருந்த போது கடைசியாக வண்டி நிறுத்தியிருக்கிறீர்கள் தம்பி என ஸ்டாண்டு உரிமையாளர் சொன்னார். எனக்கு ஒரு பழக்கம் உண்டு. வெளியூர் செல்லும் போது எனது வாகனம் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நினைப்பேன். முன்னொரு காலத்தில் சைக்கிள் ஸ்டாண்ட்களில் சைக்கிள்கள் மிக நெருக்கமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. எனவே சைக்கிள்கள் மென்மையற்று கையாளப்பட்டிருந்ததால் சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிள் வைப்பது உகந்தது அல்ல என்னும் எண்ணம் எங்கள் பகுதியில் உண்டு. ஊருக்குச் செல்லும் போது வாகனம் வீட்டிலேயே இருக்க வேண்டும் என எண்ணுவது அந்த எண்ணத்தின் நீட்சியாக இருக்கலாம். வீட்டிலிருந்து ரயில் நிலையம் 5 கி.மீ தொலைவு. வீட்டிலிருந்து பேருந்து நிலையம் 2 கி.மீ தொலைவு. ரயிலுக்குச் செல்ல இரண்டு கி.மீ நடந்து சென்று பேருந்தைப் பிடித்து ரயிலடி சென்று ரயிலைப் பிடிக்க வேண்டும். ரயிலடி செல்வதற்குள் பாதி பயணம் நடந்து விட்டதாக தோன்றி விடும்.
2011ம் ஆண்டு தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்கள் 100 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டன. அதுவரை தமிழ்நாட்டில் ரயில் கட்டணமும் பேருந்து கட்டணமும் சமமாக இருந்தன. சொல்லப் போனால் ரயில் கட்டணம் குறைவாக இருந்தது. 40 கிலோ மீட்டர் உள்ள ஊருக்கு பேருந்து கட்டணம் ரூ.12 எனில் ரயில் கட்டணம் ரூ.10 என இருக்கும். இரண்டு கட்டணமும் ஏறக்குறைய சமமாக இருந்ததால் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பேருந்துகளில் பயணிப்பதையே பொதுமக்கள் விரும்புவார்கள். எனவே ரயிலை விரும்பி ரயிலில் பயணிப்பவர்கள் மட்டுமே ரயில் பயணம் மேற்கொள்வார்கள். பேருந்து கட்டண உயர்வுக்குப் பின் பொருளியல் பயன் கருதி பொதுமக்கள் பலரும் ரயில் பயணத்துக்கு வந்தார்கள். ரயில்கள் நிரம்பி வழிய ஆரம்பித்தன. ஒரு குடும்பத்தில் இருக்கும் 4 பேர் 100 கி.மீ தூரம் உள்ள ஊருக்குப் பயணிக்கிறார்கள் எனில் பேருந்தில் தோராயமாக ஒருவருக்கு ரூ.75 கட்டணமாக உள்ளது. நான்கு பேருக்கு ரூ.300 ஆகும். எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றால் ஒருவருக்கு ரூ.45 வீதம் நான்கு பேருக்கு ரூ.180 ஆகும். ஒரு பயணத்தில் அந்த குடும்பத்துக்கு ரூ.120 மிச்சம். போக வர கணக்கிட்டால் ரூ.250 மிச்சம். இப்போது தமிழகத்தில் ரயில்கள் எல்லா நேரத்திலும் கூட்டமாக உள்ளன.
காலை 8.05க்கு திருச்சி விரைவு வண்டியைப் பிடித்தேன். மைசூர் - மயிலாடுதுறை விரைவு வண்டி மைசூரிலிருந்து மயிலாடுதுறை வந்ததும் அடுத்த ஒரு மணி நேரத்தில் மயிலாடுதுறை - திருச்சி விரைவு ரயிலாக மாறி திருச்சி பயணப்படும். 10.30க்கு திருச்சி சென்றடையும். அங்கிருந்து மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு மாலை 3.30க்கு மயிலாடுதுறை வந்து சேரும். பின்னர் 5.50க்கு மைசூர் நோக்கி ஓடத் துவங்கும். வெளிமாநிலம் செல்லும் விரைவு ரயில் என்பதால் நிறைய பெட்டிகள் என்றாலும் ரயில் நிரம்பியிருந்தது. கும்பகோணத்தில் கொஞ்சம் பேர் இறங்க நிறைய பேர் ஏறிக் கொண்டார்கள். தஞ்சாவூர் சென்றதும் மொத்த ரயிலிலும் இருந்த கணிசமான நபர்கள் இறங்கிக் கொள்ள திருச்சியில் பணி புரியும் தஞ்சாவூர் வாசிகள் பாதி பேர் வண்டியில் ஏறிக் கொண்டார்கள். நான் தஞ்சாவூரில் இறங்கினேன்.
ரயிலடியிலிருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு ஒரு டவுன் பஸ். அங்கே 20 நிமிடம் காத்திருந்து இன்னொரு டவுன் பஸ். டவுன் பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது அந்த காத்திருப்பு பல ஆண்டு காலமாக நிகழ்வதாகத் தோன்றும். ஐந்து வயதில் டவுன் பஸ்ஸுக்கு காத்திருந்தது. பத்து வயதில். பதினைந்தில். அதற்கு முடிவே இல்லை என்று தோன்றி விடும். எங்கள் பிராந்தியத்தில் ஒரு டவுன் பஸ்ஸைப் பிடித்து அதில் இடமும் பிடித்து விடுவது என்பது பெரும் செயற்கரிய செயலாக நினைக்கப்படும்.
ஒரு காலத்தில் 120 கி.மீ தொலைவு கொண்ட எந்த ஊராக இருந்தாலும் இரு சக்கர வாகனத்தில் சர்வ சாதாரணமாக செல்வேன். இப்போது அப்படி செல்வதில்லை. ரயிலையும் பேருந்தையுமே தேர்வு செய்கிறேன்.
தஞ்சாவூரில் மதியம் 2 மணிக்கு காலையில் சென்ற ரயில் மீண்டும் வந்தது. அதைப் பிடித்து மாலை 3.30க்கு ஊர் வந்து சேர்ந்தேன்.
Tuesday 2 July 2024
பழைய தஞ்சாவூர் மாவட்டம்
பழைய தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர்கள் இன்னும் மானசீகமாக பழைய தஞ்சாவூர் மாவட்டத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷார் தமிழகத்தை செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி என பிரித்திருந்தனர். அப்போது மொத்தமே 10 மாவட்டங்கள் தான் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறிப்பிட்ட தன்மையும் ஒவ்வொரு மாவட்டத்தின் மக்களுக்கும் பிரத்யேகமான சில இயல்புகளும் இருந்திருக்கின்றன. இருக்கின்றன. நிலவியலையும் மக்களின் இயல்புகளையும் அவதானித்தால் அவற்றை அறிய முடியும். இப்போது ஒவ்வொரு மாவட்டமும் மூன்றாய் நான்காய் உடைந்து மொத்தம் 38 மாவட்டங்கள் இருக்கின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பொதுத் தன்மை என்பது காவேரியும் காவேரி கொண்டு சேர்த்திருக்கும் வளமான வண்டல் மண்ணும். நீர்ப்பாசனம் மிக்க பகுதி என்பதாலும் வளமான மண் என்பதாலும் இங்கே விவசாயமும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையுமே பெரும்பான்மை. வறண்ட மாவட்டங்களில் வாழ்வோர் சந்திக்கும் அன்றாடச் சவால்கள் இங்கே பெரிதாக கிடையாது. எனவே ஒரு விதமான தேக்க நிலை என்பது இங்கே எப்போதும் இருக்கும். இது பல நூற்றாண்டுகளாக உள்ள நிலை. சோழர் ஆட்சியில் தஞ்சை மிக உயர் நிலையில் இருந்திருக்கிறது. இருப்பினும் அதன் ராணுவத் தேவைகளை நடு நாடு ( பழைய தென்னாற்காடு மாவட்டம்) , கோழி நாடு ( பழைய திருச்சி மாவட்டம்) ஆகியவையே பூர்த்தி செய்திருக்கின்றன. அதாவது பழைய தஞ்சாவூர் மாவட்டம் உருவாக்கித் தந்த உபரியில் பழைய தென்னாற்காடு பழைய திருச்சி மாவட்டத்தின் ராணுவங்கள் உருவாகியிருக்கின்றன. நாயக்கர்கள் ஆட்சியில் மதுரையும் திருச்சியும் முக்கியத்துவம் பெறுகின்றன. நாயக்கர்களின் ராணுவம் விஜயநகரம், ராயலசீமா, மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து உருவாகி வருகிறது.
தஞ்சை பிராந்தியத்தில் இன்றும் விவசாயம் தான் முக்கிய தொழில். எனினும் இங்கே குறு விவசாயிகள் என்னும் 2.5 ஏக்கர் அதற்கு கீழே நிலம் வைத்திருக்கும் விவசாயிகளே எண்ணிக்கையில் மிக அதிகம். ஒரு விவசாயக் குடும்பத்துக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் இருந்து அவர்கள் நெல் விவசாயம் மட்டுமே செய்கிறார்கள் எனில் பெரும் பொருளியல் சக்தியாக உருவாகி விட முடியாது. ஆண்டுக்கு 3 ஏக்கரில் விவசாயம் செய்து நிகர லாபமாக ரூ. 2,50,000 கிடைக்கக் கூடும். மாதம் ரூ.20,000 என அதனைக் கூறலாம். குழந்தைகள் கல்வி, கல்லூரி, திருமணம் என அனைத்துமே இந்த வருமானத்தைக் கொண்டே செய்யப்பட்டாக வேண்டும். ஒரு ஊரில் 1000 குடும்பங்கள் இருந்தால் 500 குடும்பங்கள் இதே நிலையில் இருப்பார்கள். பழைய தஞ்சாவூர் மாவட்டம் முழுக்கவே ஏறக்குறைய இதே போன்ற நிலை. 365 நாளில் 140 நாள் மட்டுமே விவசாய வேலை இருக்கும். எனவே ஒரு விதமான தேக்க நிலை எப்போதும் இருக்கும். ஒரே நேரத்தில் நில உரிமையாளர் என்னும் பெருமிதமும் இன்னொரு பக்கத்தில் விவசாயியாக வாழ்வதன் பொருளியல் நெருக்கடியும் என பழைய தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இரண்டு முகங்கள். இந்த சிறு விவசாயிகள், குறு விவசாயிகள். விவசாயத் தொழிலாளர்கள் இவர்களிடம் பண்டங்களை விற்றே இங்குள்ள வணிகர்கள் வாழ்கிறார்கள். விவசாயிகளிடம் காணப்படும் தேக்க நிலையின் சிறு பகுதி இங்குள்ள வணிகர்களிடமும் இருக்கும். இருப்பதை பராமரித்துக் கொண்டால் போதும் என்றே இங்கிருக்கும் வணிகர்கள் எண்ணுவார்கள். இது ஒரு பொது மனநிலை.
பழைய தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர்கள் பலர் அரசியலில் பெரிய பதவிகளில் இருந்திருக்கிறார்கள். இந்தியக் குடியரசுத் தலைவராயிருந்த ஆர். வெங்கட்ராமன் பழைய தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர். அவர் மத்திய நிதியமைச்சராகவும் மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்திருக்கிறார். முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பழைய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கி தமிழ்நாட்டில் இரண்டு ஆட்சி மாற்றங்களை நிகழ்த்திக் காட்டிய ஜி.கே. மூப்பனார் தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர். தமிழ் மாநில காங்கிரஸின் தற்போதைய தலைவரான ஜி.கே. வாசன் தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர். தமிழகத்தின் தற்போதைய முதல்வரும் பழைய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
பாய்ந்து ஓடி வரும் காவிரி நீர் அகண்ட காவிரியாக திருச்சியைத் தாண்டியதும் காவிரி வடிநிலத்தில் மெல்ல நடக்க ஆரம்பிக்கிறது. அவ்வாறு மெல்ல நடப்பதால் தான் வடிநில மண் முழுதிலும் நெல்லாக விளைகிறது. இருப்பினும் அந்த குறைந்த வேகம் இந்த பிராந்தியத்தின் இந்த பிராந்தியத்தில் இருக்கும் சமூகங்களின் இயல்பாகவும் ஆகிப் போனது.
Monday 1 July 2024
தஞ்சை வெண்ணாறு தவநிலை
ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பன்னிரண்டு ஆண்டுகள் தவமியற்றிய இடம் தஞ்சாவூரில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது. தவத்தை நிறைவு செய்து சுவாமிகள் தஞ்சையிலிருந்து புறப்பட்ட போது தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னன் சுவாமிகளிடம் இங்கேயே இருந்து தனது ராஜ்யத்தின் குடிகளைக் காத்து அருள வேண்டும் என வேண்டுகிறான். சுவாமிகள் தான் தவமியற்றிய இடத்தில் தனது சூட்சூம சரீரம் எப்போதும் இருக்கும் என்று கூறி புறப்படுகிறார். சில ஆண்டுகளுக்குப் பின் , தஞ்சையில் உணவுப் பஞ்சம் உருவாகிறது. அப்போது நாயக்க மன்னன் ஸ்ரீ ராகவேந்திர சுவாமியிடம் தனது குடிகளைக் காக்க பிராத்தனை செய்கிறான். மன்னனின் கனவில் தோன்றிய ஸ்ரீராகவேந்திரர் தான் தவம் செய்த இடத்தில் தனக்கு ஒரு அதிஷ்டானம் அமைக்குமாறு கூறுகிறார். அதிஷ்டானம் அமையும் இடத்தை எப்படி உறுதி செய்வது என மன்னன் கேட்க தான் தவம் செய்த இடத்துக்குச் சென்றால் தான் நாக ரூபத்தில் வந்து வழிகாட்டுவதாக சுவாமி சொல்கிறார். மன்னன் வெண்ணாற்றங்கரை தவநிலைக்குச் செல்கிறான். அங்கே ஒரு சர்ப்பம் மன்னன் கண்ணில் படுகிறது. அது குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கே அசைவின்றி இருக்கிறது. அதிஷ்டானம் அமைய வேண்டிய இடம் இதுவே என மன்னன் உறுதி செய்து கொள்கிறான். அங்கே ஒரு அதிஷ்டானம் அமைக்கப்படுகிறது. பொதுவாக அதிஷ்டானங்களில் கூர்ம பீடம் அமைப்பார்கள். கூர்மம் என்பது ஆமை. ஞானிகள் தங்கள் புலன்களை அடக்கியவர்கள் என்பதால் கூர்ம பீடம் அமைக்கப்படும். தஞ்சை வெண்ணாறு தவநிலையில் சுவாமி அளித்த குறிப்பின் படி ஐந்து தலை கொண்ட சர்ப்ப பீடம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பஞ்சம் அகல்கிறது. சுவாமிகள் இப்போதும் அங்கே தவம் செய்தவாறு பக்தர்களுக்கு அருளுகிறார்.